Pages

Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறு அணை


யோகன்னா யாழினி , மூஞ்சி புத்தகத்துல முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி சொன்னதை அப்படியே இங்கே கொடுத்து இருக்கேன் . அணையை பற்றிய முழு விவரம் தெரிய இதை  படிச்சு பார்க்கவும் .


முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !


“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப்
பார்த்தால் நன்றாகப் புரியும்.


இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,
சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.


Sunday, December 11, 2011

ஒஸ்தி- திரை விமார்ச்சனம்


முழுக்க முழுக்க சிம்பு ரசிகர்களை மனதில் வைத்து ஹிந்தி "தபாங்க்"-ஐ  ரீமேக் செய்த படம் . படம் முழுக்க லாஜீக் ஓட்டை . : சிவாஜி தி பாஸ் " ஒஸ்தி தி மாஸ் " என எஸ்டாப்ளிஷ் பண்ண பார்திருக்கிறார்கள் ,ஆனால் எடுபடவில்லை ." ஒஸ்தி தி வேஸ்ட் " ன்னு வேணா சொல்லிக்கலாம் .
திருநெல்வேலி பாஷை பேசி படம் நடிக்கணும் என்ற சிம்புவின் ஆசை நிறைவேறி உள்ளது . அரசியல் வேட்பாளர் ,ஓட்டுக்கு லஞ்சப்பணம் கொடுப்பதை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக சிம்பு . பேருக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷனனை காட்டுகிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் ஃப்ளாஷ் பேக் ,அப்புறம் சிம்பு ஆஸ்பத்திரியில் அப்பா கிட்ட பேசும் வசன காட்சி இந்த இரண்டு சீன்கள் தான் முழு படதிலும் ஓரளவுக்கு நல்ல சீன்கள் .மீதி எல்லாம் சும்மா டுபாக்கூர் .
  • சிம்பு போலீஸ் யூனிஃபார்மில் மாட்டிருக்கும்,பேட்ஜ் காட்சிக்கு காட்சி மாறி கொண்டே இருக்கிறது . கண்டினுட்டி வேணாமா , அஸோசியேட் டைரக்டர்கள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தார்கள் ..?
  • கமிஷனரில் இருந்து ,கான்ஸ்டபிள் வரை எல்லோருக்கும் ஒரே விதமான பேட்ஜ் . (சர்வீஸ்க்கு தகுந்த மாதிரி பேட்ஜ் கலரும் மாறும் ) அதுகூட பொறுத்துக்கலாம் ,ஆனா பேட்ஜ்-ஐ தலைகீழா வேற மாட்டிட்டு டயலாக் வேற .
  • வித்தியாசமா டான்ஸ், சண்டை போடுறேன்னு ,கயிற பிடுச்சுட்டு(நல்லாவே தெரியுது) டான்ஸ் ஆடுறது , சண்டை போடுறதை சிம்பு உடனடியாக நிறுத்த வேண்டும் ...கொடுமடா சாமி
  • கதாநாயகிக்கு மீறி மீறி போனால் ஒரு பத்து வரி டயலாக் மட்டும் தான் . ஒரு பானை விற்கும் குடியானவனின் மகள் எப்படி இப்படி கவர்ச்சிகரமாக உடைஅணிந்து இருக்கிறார் .அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் . ஓவர் மேக் அப் வேறு .குடியானவனின் மகள் என்ற கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் கூட ஓட்ட வில்லை. ( எந்த ஊரில் ஒரு பானை ரூ 250 க்கு விக்கிறாங்கன்னு , டைரக்டர் மாவராசன் சொன்னா புண்ணியமா போகும் ...)
  • நாசர் நடத்தும் ஆயில் மில் கடனில் ,நஷ்டத்தில் ஓடுகிறது .ஆனால் ஜித்தன் ரமேஷ் (நாசரின் மகன்) போட்டு இருக்கும் உடைகளை பார்த்தால் அப்படி தெரிய வில்லை . கடைக்கு ஆயில் டின் போட போகும் போது கூட ஷூ போட்டு கொண்டு போகிறார்.
  • துணை நடிகர்கள் என்றால் நடிக்கவே கூடாது என்று ஏதாவது சட்டமா என்ன ..?  சந்தானம், மயில்சாமி , தவிர்த்து கூட வரும் போலீஷ்காரர்கள் தேமே என்று நின்று கொண்டு இருக்கிறார்கள் . மந்திரியின் வீட்டின் முன்னால்,சுடு காட்டில் என்று மக்கள் எந்த வித  மூவ்மெண்ட்டும் காட்டாமல் சிலையாக நிற்கிறார்கள். ரொம்ப அமெச்சூர் தனம் .
  • வில்லனாக வரும் "பாக்ஸர் டேனியல்" என்னத்த பாக்ஸிங் பழகினார் . சிம்பு அடிக்கும் போது ஒரு பாக்ஸிங் மூவ்மெண்ட் கூட காட்ட வில்லை . அட சும்மானாச்சுக்கும் கையை காத்துல ஆட்டி இருக்கலாம் . அது கூட செய்ய வில்லை . என்ன வில்லனோ..!
  • சிம்பு அடிக்கும் போது எல்லோரும் அனாவசியமாக பறந்து போய் விழுகிறார்கள். கொஞ்சம் கூட நம்பும் படியாக இல்லை.
  • வில்லன் அடி வாங்கி கொண்டு இருக்கும் போது , ஜித்தன் ரமேஷ் அம்மாவின் இன்ஹேலரை காட்டுவதும் , சிம்பு வீறு கொண்டு எழுவதும் எம்.ஜி.ஆர் காலத்து பாணி . டைரக்டர் படம் பார்க்கிறவங்களை என்ன கேனயன்கள்ன்னு நெனச்சுட்டாரா  ...?
  • எல்லாத்தையும் விட சிம்பு வீறு கொண்டு எழுந்து,உடம்பை முறுக்கும் போது சட்டை சும்மா அப்படியே பிச்சுக்கிட்டு போய் விழும். ( படம் பாக்கிறவங்க முடிய பிச்சிக்கிறது தான் மிச்சம் ...! Disappointed smileஎனக்கு அது கூட இல்ல ...).  சிக்ஸ் பேக் காட்டுறாராம். கொடுமடா சாமி . ஹீரோக்கள் எல்லாம் இனி சட்டயை கழட்டி சண்டை போட கூடாது என்று அவசர சட்டம் கொண்டு வரணும் . 'லோக் பால்'லை விட இது ரொம்ப அவசரம் .
டிஸ்கி :
1. டிக்கெட் @ 2 பேருக்கு 200 X 2  =400
2. காஃபீ =050 
3. கோக் & பாப் கார்ன் =160
4. ஃபிரெஞ்சு பிரை =075
5 போக்குவரத்து செலவு =100
         மொத்தம் =785
தண்ட செலவு (டிக்கெட் செலவு ) Crying face
400 !

Monday, December 5, 2011

“கஷ்ட(ம்)மர்"


காந்தி

கம்பெனில நொம்ப மும்மறமா ஆணி புடிங்கிட்டு இருந்த போது , நண்பர் ஒருத்தர் வந்து "டக்ளு ( டக்ளு - சொட்ட தலையா ..! ) , இத கொஞ்சம் கேளேன் " என்று தன்னுடைய அலை பேசியயை ஆன் பண்ணிவிட்டு போனார் .  நெஜமா இல்லயானு தெரியல இருந்தாலும் சிரிப்பு வந்தது Open-mouthed smileஎன்னோமோ உண்மை தான் . நீங்களும் கேட்டு பாருங்களேன்...!


இந்த கஷ்டமர் கால் சென்டெர்ல இருக்கிற ஆள கஷ்டப்படுத்தினார் , ஆனா நான் கால் சென்டர் ஆள தொடர்பு கொள்வதற்க்குள் , சொட்ட தலையில் இருக்கிற என் கொஞ்ச நஞ்ச முடியை பிச்சுக்கிட்ட  என் கஷ்டமர் அனுபவத்தை தெரிஞ்சுக்க இங்க சொடுக்கவும்.

Wednesday, November 30, 2011

புகுஷிமோவில் நடந்தது என்ன ...?

புகுஷிமோவில் அணு உலை வெடித்ததா...? கதிரீயக்கம் வெளியேறியதா ...? புகுஷிமோவில் உண்மையில் ... நடந்தது என்ன....? இப்படி முடி இல்லாத சொட்ட மண்டைய நொம்ப நாளா தேச்சுட்டே இருந்தேன். IAEC மற்றும் ஜப்பானின் புகுஷிமோ அணு உலை வலை தளம் , இன்னும் பல வலை தளங்களை பார்க்கும் போது சில விஷயம் புரிஞ்சது .அதை தொகுத்து உள்ளேன்.முழு விவரம் படிக்க இந்த விக்கிபீடியாவை சொடுக்கவும் .

  • நில நடுக்கம் ஏற்படும் போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் வகையில் தான் அமைக்கப்பட்டு இருக்கும். புகுஷிமோவிலும் நில நடுக்கம் ஏற்பட்ட போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது .
  • நில நடுக்கம் ஏற்பட்ட சில நொடிகளில் "கண்ட்ரோல் ராடுகள்" சொருகப்பட்டு அணு உலை "சங்கிலி தொடர் வினை" உடனடியாக நிறுத்தப்பட்டது.
  • செயின் ரியாக்சன் நின்றாலும் ," டீகே ஹீட் " வந்து கொண்டு தான் இருக்கும். இந்த டீகே ஹீட் ரொம்ப முக்கியமானது. உதாரணமாக ஒரு அணு உலை 3000 MW மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்றால் 210 MW மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு இருக்கும் இந்த டீகே ஹீட் . (சுமார் 7 % ). இந்த வெப்பமானது அணு உலை நிறுத்திய முதல் நாளில் 30 MW மின் உற்பத்தி செய்யும் (சுமார் 1 % )அளவுக்கு குறைந்து விடும். டீகே ஹீட் முழுவதும் குறைய நிறைய நாட்க்கள் பிடிக்கும்.இந்த வெப்பத்தை தணிக்க வேண்டும் . இல்லை என்றால் அணு உலை நடுப்பாகம் உருகி விடும் அபாயம் உள்ளது.
  • அணு உலை செயல் பாட்டை நிறுத்திக் கொண்டதால் அங்கு மின்சாரம் கிடையாது . எனவே டீசல் ஜெனரேட்டரை கொண்டு அணு உலை வெப்பம் தணிக்க நடவடிக்கை ஏற்பட்டது. இது வழக்கமாக இல்லை என்றாலும் ,இந்த மாதிரி பேரிடர் நேரங்களில் செய்யப்படும் முறைகளில் ஒன்று தான் .
  • துருதிஷ்டமாக நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி அலை வந்து அந்த டீசல் ஜெனரேட்டர்களின் செயல் பாட்டை முடக்கியது .
  • உடனடியாக அணு உலை பேக் அப் பேட்டரிகளின் உதவியுடன் குளிர்விக்க பட்டது. இது எல்லாம் தானியங்கி முறையில் நடந்தது . இந்த பேட்டரிகளின் மூலம் சுமார் 8 மணி நேரத்திர்க்கு அணு உலையை குளிர்விக்க முடியும். புகுஷிமோவில் 8 மணி நேரம் பேட்டரியால் பேக் அப் செய்யப்பட்டது.

Thursday, November 10, 2011

Pressurized water reactor -அணு உலை வேலை செய்யும் விதம்


Pressurized Water Reactor-மாதிரி படம்
Pressurized water reactor -அணு உலை வேலை செய்யும் விதம்.  நன்றி : விக்கிபீடியா ( Wikipedia )
பக்கத்தில் இருக்கிற படம் மாதிரிதான் ஒரு PWR அணு உலை வேலை செய்யும்  . அணுக்கரு வினையின் காரணமாக மிக மிக அதிக அளவில் (1000 டிகிரிக்கும் மேல் )  சூடு வெளிப்படும் . இங்கே படத்தில் சிகப்பு கலரில் காட்டப்பட்டு இருப்பதை போன்று அந்த சூட்டை தண்ணீர் கொண்டு குளிர்விப்பார்கள் . இந்த தண்ணீர் ஒரு குழாயின் மூலமாக சுழன்று கொண்டே இருக்கும்.  இங்க ஒரு கேள்வி வரும் 1000 டிகிரிக்கு மேலேனா நீர் ஆவி ஆகிவிடாதா ? . ஆகாது ஏன்னா அது மிகவும் அழுத்தத்துடன் வைக்கப்பட்டு இருக்கும் , ஆனால் அதன் சூடு சுமார் 500 டிகிரிக்கும் அதிகமாய் இருக்கும்.இப்படி சூடு படுத்தப்பட்ட நீர் நீராவி உற்பத்திக் கலனுக்குள் செலுத்தப்படும்.

நீராவி உற்பத்திக்  கலனில் தண்ணீர் நிறைய இருக்கும்.  எனவே பைப்பில் உள்ள சூடானது நீராவி உற்பத்தி கலனில் உள்ள  நீருக்கு கடத்தபடுகிறது. எனவே நீராவி உற்பத்தி கலனில் உள்ள நீர் ஆவி ஆகி பக்கத்தில் உள்ள டர்பைன்னுக்கு செல்கிறது.இந்த டர்பைனுடன் ஒரு மின்சார ஜெனரேட்டர் இணைந்து இருக்கும் . அதில் இருந்தது மிசாரம் பெறப்பட்டு விநியோகம் நடைபெறும்.

டர்பைனில் இருந்தது வெளிவரும் நீராவி  கண்டன்சரில் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராவி உற்பத்தி கலனுக்குள் செலுத்தப்படுகிறது.  இது ஒரு சுழல் நிகழ்ச்சி. கண்டன்சரை குளிர்விக்க வெளியில் இருந்து தண்ணீர் ஒரு பைப் மூலமாக அனுப்பப்படுகிறது. இந்த தண்ணீர் தான் கூடங்குளத்தில் கடலில் கலக்கப்படும் . 
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்ட தண்ணீரும் , நீராவி உற்பத்தி கலனில் உள்ள தண்ணீரும் ஒன்றுக்கொன்று கலக்காத படி  உள்ளது. சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்ட தண்ணீரானது நேரடியாக அணுக்கரு பொருளின் மீது படர்ந்து உள்ளது . எனவே அது கதிரியக்கத்துக்கு  உட்பட்டது . ஆபத்தானதும் கூட.  இப்படித்தான் கூடங்குளத்தில் உள்ள அணு உலையும் இயங்க போகிறது.

Wednesday, November 9, 2011

கூடங்குளம் அணு உலை…!


நொம்ப நாளா டப்பாவை தொடவே இல்லை . ( நான் ஆணி புடுங்கிற கம்பேனில, வெப் பேஜ் தயாரிப்பு விசயமா கொஞ்சம் பிஸி ஆய்ட்டேன் ...) .நண்பன் கிட்ட இருந்து ஒரு குறுஞ்செய்தி , "டேய் உன் ப்ளாகை யாரோ சைட் போட்டு வித்துட்டாங்க " , அதான் அவசர அவசரமா இதை டைப் பண்ணிட்டு இருக்கேன் . சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு பதிப்ப போடலாம்னு ...

கூடக்குளம் அணு உலை பிரச்சனை வர வர பெரிதாகி கொண்டே வருகிறது . ஜப்பானின் புகுஷிமோ அணு உலை விபத்துக்கு பிறகு மக்களின் பயம் இன்னும் கூடி இருக்கிறது. பத்தாத குறைக்கு அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள் , இன்னும் சில தொண்டு இயக்கங்கள் இவர்களின் அன்றாட அறிக்கைகள் என மக்களை போட்டு குழப்பி கொண்டு உள்ளார்கள்.

நிறைய பேருக்கு , அணு உலை எப்படி இயங்குகிறது? , அதன் முதன்மையான எரி பொருள் என்ன?, எவ்வளவு தேவைப்படும்? , எவ்வளவு மின்சாரம் கிட்டும்?, கழிவு என்ன ?, எவ்வளவு கதிரியக்கம் வெளிப்படும்? போன்ற விவரங்கள் எதுவும் தெரியாமல் பத்தோடு பதின்னொன்றாக எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள்.

அணு உலையில் இருந்து மின்சாரம் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு விசயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மாற்று வழியில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறேன் என்பதெல்லாம் தற்போது நடவாத காரியம். காற்றில் இருந்து மின்சாரம், கடல் அலையில் இருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் என்பதெல்லாம் கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும். ஆனால் இதை எல்லாம் நிறுவுவதற்கு ஆகும் செலவு , பராமரிப்பு செலவு, மிக மிக அதிகம். நமது ஒரு பக்கத்து கிட்னிய வித்தா தான் ஒரு யூனிட் மின்சாரம் வாங்க முடியும்.

PHOTO BY: A. Shaikmohideen  நன்றி: THE HINDU
 
அணு உலை நிறுவுவதாலேயே ஆபத்து என்றல்லாம் பைத்தியகாரதனமாய் நினைக்க கூடாது. அப்படி பார்த்தால் பாலம் கட்டுவது கூட நொம்ப ஆபத்தானது தான். எப்ப வேணாலும் இடிந்து விழலாம் . என்ன கேரண்டி ...? ரயிலில் பயணம் செல்லவது கூட பாதுகாப்பானது கிடையாது. எப்போது வேணும் என்றாலும் தடம் புரளலாம் . விமான பயணம் கேக்கவே வேணாம் ,எப்போ வேணாலும் யார் வேணுமானாலும் கடத்தி கொண்டு போய் ஏதாவது அடுக்கு மாடி கட்டிடத்தில் மோத விடலாம்.

பாலம் , ரயில் , விமானம், பஸ், பைக் , இத்யாதி இத்யாதி எல்லாம் Necessary Evil என்று நமது வாழ்க்கைக்கு தேவையான அல்லது அத்தியாவசமான கேடு என்று வகைப் படுத்தலாம். இவைகள் இல்லாமலும் வாழ முடியும் . ஆனால் எவ்வளவு பேர் முன் வருவார்கள் என்பது தான் கேள்வி. ? இவைகளில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் எத்தனை, எத்தகையது , அவற்றில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொண்டும் ,இதனுடைய முழு பயனையும் அடைவது எப்படி என்பதில் தான் இருக்கிறது நம்முடைய சாமார்த்தியம். ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய மிதி வண்டியில் பிரேக் என்பதே கிடையாது. பிரேக் இல்லாத வண்டியை ஒட்டி, நிறைய வாங்கி கட்டி கொண்ட ஒரு ஆசாமி பிரேக்கை வைத்தான். இதில் ஆபத்து விகிதம் கொஞ்சம் தான் , ஆனால் அணு உலையில் மிக அதிகம்.

 
அமெரிக்காவின் திரி மைல் , ரசியாவின் செர்நோபிள் அணு உலைகள் போன்றது கிடையாது கூடங்குளத்தில் அமைந்திருக்கும் அணு உலை. அது மிகவும் பாது காப்பானது. யார் இந்த உத்திரவாதத்தை தருவது, ? தரத்தை யார் மதிப்பிடுவது ? என்னென்ன பாது காப்பு உள்ளது ? அணு உலை எப்படி இயங்குகிறது போன்றவைகளை என்னுடைய அடுத்தடுத்த பதிப்புகளில் போடுகிறேன்...!

ஆணி புடுங்கிற வேலை கொஞ்சம் இருக்கு , முடிச்சுட்டு வந்துருறேன். ஓகேயா...! 

அதுவரை வவ்வால் பார்வையின்
கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை பதிவை படித்து பாருங்கள் ...!

Friday, September 30, 2011

திரை விமர்சனம்-"முரண்"

இரு வேறு கேரக்டர் கொண்ட இரண்டு நபர்கள் சந்தித்துக் கொண்டால் ,அவர்கள் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதை "முரண்" காட்டுகிறது. இயக்குனர் சேரன் இதில் ஒரு நடிகராக மட்டுமே வந்துள்ளார். ஒன்றும் வித்தியாசமாக நடிப்பில் காட்ட வில்லை .முந்தியப் படங்களில் காட்டிய அதே மேனரிசம் தான் இந்த படத்திலும். பிரசன்னா காரில் லிப்ட் கேட்டு போகிறார் சேரன், தன் தலை மேல் ஏழரை நாட்டியம் ஆடபோகிறது என்று தெரியாமலேயே.அப்போது கதை வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. பிரசன்னாவும் ,சேரனும் மாறி மாறி ஒருவர் தன்மானத்தை ஒருவர் தூண்டிவிடும் படியாக பேசிக்கொள்கிறார்கள் . இதில் சேரன் கொஞ்சம் அமைதியான ஆள். இருந்தாலும் பிரசன்னா அவரை தூண்டி விடுகிறார். படத்தில் காமடி ட்ராக் எதுவும் தனியாக போட வில்லை. ஆனாலும் சேரனின் அப்பாவியான கேரக்டர் நடிப்பில் நமக்கு சிரிப்பு வருகிறது.

Wednesday, September 21, 2011

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்

நொம்ப நாளைக்கு அப்புறம், இங்கே பக்கத்தில் தமிழ் படம் போட்டு இருந்தார்கள் . ஏ.ஆர். முருகதாஸ் என்பதால் படம் பார்க்க போனோம். உண்மையில் படம் அருமை. அதுவும் படம் ஆரம்பத்தில் வரும் அந்த பஸ் விபத்து சீன், அதுக்காகவே டைரக்டருக்கு ஒரு சபாஸ் போடலாம். கொஞ்சம் எசகு பிசகாக எடுத்து இருந்தாலும் அந்த விபத்து காட்சி சப்புன்னு போய் இருக்கும். இப்படி ஒரு விபத்துல எப்படி இவங்க எல்லோரும் போய் மாட்டுனாங்க என்று படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது அந்த விபத்து காட்சி. 

ஹாலிவுட்டில் , Final Destination என்ற படத்தில் விபத்து ஏற்படுவதை மிக தத்ருபமாக காட்டி இருப்பார்கள். அதே மாதிரி ஒரு சீனை தமிழ் படத்தில் பார்ப்பதில் மிக மகிழ்ச்சி . அனன்யா - சர்வா ஒரு ஜோடி. ஜெய் -அஞ்சலி இன்னொரு ஜோடி. அனன்யா சென்னைக்கு வந்து பஸ் ஏறுவதில் சிக்கல் , உதவிக்கு அக்கா மூலம் சர்வாவை கூடவே கூட்டிக்கொண்டு சுற்றுகிறார். இவர்களுக்கு இடையில் நடக்கும் டயலாக்குகள் மிக இயல்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வசனம் யார் என்று தெரியவில்லை. ஆனால் போர் அடிக்காமல் வளவள என்று இழுக்காமல் இயல்பாக கொண்டு சென்றதுக்கு ஒரு சபாஸ். அனன்யாவுக்கு சர்வா மீது இயல்பாக காதல் வருவதை நாம் ஏற்றுக் கொள்லலாம் . முதல் மாத சம்பளத்தில் அப்பாவுக்கு ஜீன்ஸ் பேன்ட், சர்ட் ( சர்வா .போட்டிருந்த மாதிரியே ...) என எடுத்து கொடுப்பது, சர்வாவுக்கு பேர் தேடுவது என காதல் நகைச்சுவை.


ஜெய் -அஞ்சலி ஜோடி இவர்களை விட வித்தியாசம் . அஞ்சலி ஒரே வாயாடி பெண்ணாக வருகிறார். ஜெய் காதலியை வாங்க ,போங்க என்று அழைக்கும் அப்பாவியாக வருகிறார். அஞ்சலி ஜெய்யை படம் முழுக்க நன்கு களாய்கிறார். அங்காடி தெருவில் வந்த அழு மூஞ்சி பொண்ணா இது என்று ஆச்சிரியப் பட வைக்கிறார். படம் முழுக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இழை ஓடுகிறது. வசனம் அந்த மாதிரி. ஒரு லாங் ரூட் பஸ்சில் எந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும் என்பதை மிக நுனுக்கம்மாக பதிவு செய்ய பட்டு இருப்பது நல்ல விஷயம். இதன்னாலேயே படம் நம்முடைய இயல்பான வாழ்க்கையுடன் ஒட்டி விடுகிறது. இந்த இரண்டு ஜோடியும் எப்படி அந்த பஸ் விபத்தில் ஒன்று சேருகிறார்கள் என்பது தான் கதை. இதை இயக்குனர் சிறப்பாக செய்து இருக்கிறார். முருகதாஸ் மீது என்னக்கு இருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டார். "என்னது திருச்சி வந்துருச்சா"  என தூக்கத்தில் திடும் என அடிக்கடி எழுந்திருக்கும் நபர், கல்யாணமான புது மனைவியை பிரிய மனமில்லாமல் அடிக்கடி பஸ்சில் இறங்கி ஏறும் நபர், காலேஜ் பெண்ணும் பையனுக்கும் இடையே ஏற்படும் மெல்லிய காதல் , ஐந்து வருடங்களுக்கு பிறகு தன் குழந்தை மகளை பார்க்க போகும் துபாய்  அப்பா என ஒவ்வொருவரும் கச்சிதமாக நடித்து உள்ளார்கள். காலேஜ் பையன் ஜி.ஹெச் ல் அந்த காலேஜ் பெண்ணின் விவரம் தரும் போது சோகம் நம்மையும் பரிதாப பட வைக்கிறது.அதே சமயம் கண்டிப்பாக அந்த துபாய் அப்பா விபத்தில் இறக்க தான் போகிறார் என்பது ஒரு மாதிரியாக யூகித்து விட முடிகிறது.


   படத்துக்கு பின்னணி இசை ஒரு பிளஸ் . அதுவும் ஜி.ஹெச் ல் அஞ்சலி ஜெய் உடலை பார்க்கும் போது சுத்தமாக பின்னணி இசையே இல்லை. பின்னர் அவர் "கதிரேசா....." என்று கதறும் போது , அந்த தாக்கம் நம்மையும் உணர வைக்கிறது. பின்னணி இசைக்கு இந்த இடத்தில் ஒரு சபாஸ் போடலாம் .  மொத்தத்தில் திரை அரங்கத்துக்கு சென்று பார்க்க வேண்டிய திரை படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் செந்தில்லாக வரும் ( அஞ்சலியை 5  வருடமாக காதலித்து நொந்து போய் விட்டவர் ) ,நபர் நமக்கு அறிமுகமானவர் தான் . நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான பரிசை மதன் , மற்றும் பிரதாப் போத்தன் மூலம் பெற்றவர்.. இந்தப் படத்தில் அவ்வளவாக சீன் இல்லை என்றாலும்  அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு. 

டிஸ்கி :
ஆன் லைனில் டிக்கெட் செலவு ( 180 @ 2 பேர் + சர்வீஸ் சார்ஜ் )      = 370
பாப் கார்ன் + கோக் (400 ml )                                                = 140
ice cream                                                                         =  60
பைன் ஆப்பிள் மிட்டாய்                                                          =  80
                                                                           மொத்தம் = 650
இவ்ளோ காஸ்ட்லியா இருந்தா ஏன் திருட்டு DVD வராமல் இருக்கும். அடுத்த தடவை என்னுடைய பைக்க வித்தா தான் படம் பார்க்க முடியும் என நினைக்கிறேன்.

   

Tuesday, June 28, 2011

வகைக் கெழுவும் நானும் ...! (சமச்சீர் கல்வி...!)

சமசீர் கல்வித்திட்டத்தை பரிசீலனை செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையீன்  பேரில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து உள்ளது. நல்லது நடந்தால் சரி. நிபுணர்கள் எந்தவிதமான பார பட்சமும் இன்றி ஒரு நல்ல பாட திட்டத்தை தந்தால் நல்லது.அவர்களுக்கு என்னுடைய சிறிய வேண்டுகோள் கீழே உள்ளது:

(UPDATE: ஒரு வழியாய் சமச் சீர் ,கொண்டு வந்துட்டாங்கையா ...மக்கா ...! )

தமிழ் - நன்கு எழுத்து பிழை இல்லாமல் ,எழுதமுடிகிற மாதிரி புத்தகமும் பாடமும் இருக்க வேண்டும். 'அறுசீர் கடி நெடிலடி கலந்து ஆசிரியப்பாவில் தொடங்கி குரள்பா வழியாக கலிப்பாவில் 'பாட்டு அல்லது கவிதையோ ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் இல்ல பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தேவை இல்லை என்பது என்டுடைய சொந்த கருத்து." தமில் வாள்க..! வழர்க" என்ற நிலைக்கு போகாமல் காப்பாத்தனும். பைத்தியம் - பயித்தியம் வித்தியாசம் தெரியற மாதிரி இருக்கட்டும் புதிய சமச்சீர் கல்வி.கதை ,கட்டுரை எழுத மாணவர்களை ஊக்கு விக்கலாம் .

ஆங்கிலம் - மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே ஆங்கிலம் என்று இல்லாமல்,அடிப்படை இலக்கணம் எங்கனம் எப்படி உபயோக படுகிறது என்பதை திறம் பட சொல்லி தர வேண்டும் . இங்கேயும் கட்டுரை எழுதுவதை ஊக்கு விக்கலாம்.

அறிவியல் - அன்றாட வாழ்வில் எப்படி எல்லாம் அறிவியல் பயன்படுகிறது என்பதை நல்ல உதாரனதுடன் எடுத்து சொல்ல வேண்டும். வெறும் 'மியசிஸ் ' 'மைடசிஸ் ' என்று ஜல்லி அடிக்காமல் இன்டர்நெட்டில் இருந்து நல்ல நல்ல படங்களாக காட்டி அதை புரிய வைக்க வேண்டும். மைடோகாண்டிரியாவை ஒரு ரிப்பன் மாதிரி தான் கற்பனை செய்து வைத்து இருந்தேன். அதே மாதிரி பிரயோபைட்டா, டேரிட்டோபைட்டா ஒரு இருதய வடிவ இலை மாதிரி யூகம் செய்து வைத்து இருந்தேன்.ஆனால் உண்மையில் அதன் வடிவம் வேறு.பால்மர் வரிசை , நியுட்டன் வளையம், இதை எல்லாம் பார்க்காமலே படித்து வந்தேன்.அப்படி இல்லாமல் நிறைய ஆய்வக செயல்கள் இருக்கும்மாறு வேண்டுகிறேன்.

கணிதம்- ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் அதன் மூன்றாவது பக்கத்தின்...போன்ற பிதாகரஸ் தேற்றங்கள் நடை முறை வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது என்பதை விளக்க வேண்டும்.பாய்சன் பரவல் ,அந்த தேற்றம் ,இந்த தேற்றம் எல்லாம் எப்படி உபயோக படிகிறது என்பதை ஒரு இரண்டு வரிகளில் எடுத்துச் சொன்னா நொம்ப புண்ணியமா போகும். வகை கெழு, தொகை கெழு , எல்லாம் எங்கு எப்படி நமக்கு பயன் படுகிறது என்பது தெரியாமலே படித்தேன் நான்.


என் பரிச்சை பேப்பர் 
உத்திர  பிரதேசம் எங்கு உள்ளது என்பது தெரியாமலேயே நான் அங்கு கரும்பு விளைச்சலைப் பற்றி படித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக ஒரு இந்திய வரைபடமும் , உலக வரைபடமும் இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட ஆசிரியர்கள் தங்களுடைய அறிவை இந்த காலத்திற்கு ஏற்ப அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.அணுக்கரு உலையை பற்றி பாடம் எடுக்கும் போது கூடங்குளம், ஜப்பானின் கதிரியக்கம் ஆகியவற்றையும் சொல்ல வேண்டும்.

லீவில் உள்ள போது +2 க்கு ரிசல்ட் வந்து இருந்தது . நிறைய பேர் சதம் அடித்து இருந்தார்கள். வழக்கம் போல பெண்கள் பையன்களை விட அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தார்கள். எப்படி இதனை பேர் சதம் அடித்தார்கள் என்று தெரிய வில்லை. ஒன்று பாடத்  திட்டம் ரொம்ப எளிமையாக இருந்திருக்க வேண்டும் இல்லை எனில் பேப்பரை எளிதாக திருத்தி இருக்க வேண்டும்.இயற்பியல் , வேதியல் , உயிரியல் போன்ற பாடத்திலும் சதம் போட்டு இருந்தார்கள். நான் படித்த காலத்தில் கணிதத்தில் சதம் எடுத்தால் அவனை  தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.இண்டர்நெட், டிவி ,மீடியா என்று டெக்னாலஜி வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் பாடங்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை.வாத்தியார் நல்லா புரியும் படி சொல்லி தர வில்லை என்றால் , இன்டர்நெட்டில் வேண்டிய அளவிற்கு அதை பற்றிய தகல்கள் அவனுக்கு கிடைத்து விடும்.( கிராம புற மாணவர்களை தவிர )

Monday, June 27, 2011

ஊழல்

photo courtesy :http://www.indiavision.com
கொஞ்ச நாளா லோக் பால் லோக் பால்னு பேப்பரல பார்த்து ஏதோ புதுசா ஒரு வகை பால்னு நினச்சுட்டேன். சரி என்ன தான் இதுல விஷயம் இருக்குது பார்ப்போமே என்று அப்படியே பேப்பரை மேஞ்சு பார்த்தேன்.அடங் கொய்யால ...இம்ம்புட்டு விஷயம் இருக்குதான்னு இப்ப தானே தெரியுது . நமக்கு இந்த பேப்பர் படிக்கிறது (அதுவும் இங்க்ளிபீசுல பேப்பர் படிகிறதுனா... காத தூரம் ஓடுவேன்...!), பொது அறிவ வளர்திக்கிறது ,அறிவு சம்பந்தம்மான எந்த விசயமும் அவ்வளவா என் கிட்ட நெருங்க விடாம பார்த்துக்குவேன் .எனக்கு தெரியாத மேட்டர் எதுவும் இல்லை என்பது எனது எண்ணம்.

லோக் பால் சட்டத்தை நமது இந்திய அரசாங்கம் கடந்த 45 வருடங்களாக ,எப்பாடு பட்டாவது நிறைவேத்த கூடாதுன்னு இம்புட்டு நாள் இழுத்தடிசுட்டு இருந்து இருக்கு.இந்த விசயத்துல எல்லா கவர்ன்மெண்ட்டும் ஒரே குட்டைல ஊறின மட்டைகள்.ஊழலை ஒழிக்க CBI, CVC இவங்க ரெண்டு பேரே போதுமானது என்பது எனது கருத்து, ஒழுங்கா நேர்மையாக யாருடைய குறுக்கீடு இல்லாமல் இருந்தால்.ஆனால் இந்த ரெண்டு விசயமும் அவ்வாறு இல்லை. CBI எண்பது ஒரு சுதந்திரமாக இயங்க கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் .அனால் அவ்வாறு இல்லாமல் மதிய அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.

 

இவிங்க விசாரன பண்ணுற லட்சணம் தான் ஊர் ஒலகத்துக்கே தெரியும் ,அத நான் வேற சொல்லி நாற அடிக்க வேண்டாம்.CVC ஒரு தனிப்பட்ட அமைப்பு தான் . தவறு செய்யும் அதிகாரிகளை தட்டி கேட்க்கும் அதிகாரம் உண்டு. ஆனா பாருங்க இந்த 2G விசயத்துல அவிங்க எப்படி நடந்துட்டாங்கனு நமக்கு நல்லாவே தெரியும். அது போக CVC யால தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. ஒன்லி பரிதுரை மட்டும் தானாம் . தண்டிக்கும் அதிகாரம் இருந்தாலே நாம அடங்க மாட்டோம் , இதுல ஒன்லி பரிந்துரை மட்டும் தான்னா கேக்கவா வேணும். அதனால ஏதாவது ஒரு அமைப்பு தனிப்பட்ட முறையில் ,தண்டிக்கும் அதிகாரத்துடன் இருந்தால் நல்லா இருக்கும்னு ஏதோ ஒரு புண்ணியவான் யோசனை செய்த்ததால லோக் பால் வந்தது , ஆனா 45 வருடம்... கொஞ்சம் ஓவர் தான்.

கொஞ்ச நாளா அண்ணா ஹசாரே குழுவுக்கும் ,மத்திய அரசாங்கத்துக்கும் ஒரே இழுபறி. ரெண்டு பெரும் என்ன தான் சொல்லுறாங்கனு இங்க கொஞ்சம் பாக்கலாம்.

1. லோக் பால் அமைப்பு :

அண்ணா : 11 பேர் கொண்ட குழு. இந்த 11 பேரை "தேர்ந்தெடுக்கும் கமிட்டி " தேர்வு செய்யும் . தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் (அ) 2- அரசியல்வாதிகள்
(ஆ) 2 - அரசியல் அமைப்பு அதிகாரிகள் (இ) 4-ஜட்ஜுகள் இருப்பார்கள். CBI, CVC போன்றவை லோக் பால் அமைப்புடன் இணைந்து செயல் படும்.விசாரணை மற்றும் தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு உண்டு.
அரசாங்கம்: 11 பேர் கொண்ட குழு.இந்த 11 பேரை "தேர்ந்தெடுக்கும் கமிட்டி " தேர்வு செய்யும்.ஆனால் 10ல் 6 பேர் -அரசியல்வாதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். CBI, CVC போன்றவை லோக் பால் அமைப்புடன் இணைந்து செயல்படாது .விசாரணை மற்றும் தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு இருக்கலாம்.

என் கருத்து : அண்ணாவுடன் ஒத்து போகிறது.10ல 6 பேர் அரசியல்வாதிகள் -இதுல இருந்தே இவங்க எண்ணம் புரியறது . ஏன் அண்ணா சொல்லுற மாதிரி இருந்தா என்னவாம் ...?

2. பிரதம மந்திரி லோக் பாலுக்கு கட்டு பட்டவரா ..?
அண்ணா : கண்டிப்பாக பிரதம மந்திரி லோக் பாலுக்கு கட்டுப்பட்டவர். அதுவும் இல்லாமல் அவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட துறைகளை நிர்வாகிக்கிறார் ,எனவே அவரும் இதற்கு கட்டுப்பட்டவர்.

அரசாங்கம் : இல்லை ,பிரதம மந்திரி இதற்கு கட்டுப் பட்டவர் இல்லை . அப்படி செய்தால் அவரின் அன்றாட அலுவலக பணிகள் பாதிக்க படும்.ஒருவர் லோக் பால் சட்டத்தினால்விசாரிக்க படுகிறார் என்றால் அவர் தனது பதவியை ராஜினாம செய்ய வேண்டும் . இது பிரதம மந்திரி செயல் பாட்டை பாதிக்கும்.

என் கருத்து: அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஊழல் பண்ணுனா ராஜினாமா தான் பண்ணனும். பிரதம மந்திரினா ஒன்னும் பெரிய கொம்பு இல்ல ... தாராளம லோக் பாலுக்கு கட்டுப்படலாம்

Tuesday, May 31, 2011

ஆணி புடுங்கிற வேலை

கொஞ்சம் ஆணி புடுங்கிற வேலை அதிகம் ஆய்டுச்சு ...! மன்னிக்கவும் . ஜூன் 10 க்கு அப்புறம் தான் , டப்பாவ தொட முடியும்னு நினைக்குறேன்,.
"நெறைய மேட்டர் இருந்தும் ஒன்னும் செய்ய முடியலியே ...! என்ன பண்ணுவேன் ...! ஹோ ..ஹோ..ஹோ.."
(கடைசி வரிய நடிகர் திலகம் சிவாஜி  மாதிரி வாசிக்கணும்... )( சே ஒரு தத்துவம் கூட போடா முடியாம போய்டுச்சே ...!)

Sunday, May 8, 2011

குறுஞ்செய்திகள்

கழுகுக்கும்  மனிதனுக்கும்  என்ன  ஒற்றுமை ?
ரெண்டுமே  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிச்ச  படம் . 
------------------- 
எப்பொழுதும்  விருது  வாங்கும்  ஊர்  எது ?
விருது நகர் . 
-------------------
எந்த  கடைக்கு  மூக்கு  மேல  கை  வச்சுக்கிட்டு  போகணும் ?
சாக்கடை 
-------------------
எந்த  கேக்கை  சாப்பிட  முடியாது ?
Detergent - கேக்
---------------------  
சாப்பிடக்கூடிய  ஆணி   எது ?
பிரியாணி 
---------------------
கை  உள்ள  மரம்  எது ?
முருங்  "கை " மரம் .   
--------------------
எந்த  மான்  கோயிலை  சுத்தி  சுத்தி  வரும் ?
பக்தி -மான் 
-------------------
சாம்பார  கோல்ட்  ஆக்கணும்ன என்ன  பண்ணனும் ?
. 56 கேரட்ட  உள்ள  போடணும் 
-------------------- 
டென்ஷன்  அதிகம்  ஆனா  என்ன  ஆகும் ?
"Eleven" ஷன்  ஆகும் .  
--------------------
ஹெட் மாஸ்டர்  ஏன்  ப்ளம்பர  வர  சொல்லுறாரு ?
  கொஸ்டீன் பேப்பர்  லீக்  ஆய்ர்ச்சாம் ! 
-----------------------
Man1( கோபத்துடன் ): அந்த டாக்டர் என்ன பார்த்து "எப்படி இருங்கீங்க " என்று கேட்டார் .
Man2: சரியாதானே கேட்டார் . ஏன் இப்படி கொவபடுறிங்க...?
Man1: அத ஆச்சிரியத்துடன் இல்ல கேட்டார் . 
-------------------
Postman: உங்களுக்கு  ஒரு  மொட்டை  கடிதாசி  வந்து  இருக்கு .
Man: எங்க  இருந்து ?
Postman: பழனில இருந்து .
--------------------
Man1: கையில்  கட்டையோட எப்பொழுதும்  அலைகிறாரே , அவர்  யாரு ?
Man2: அவர்  கட்ட  பிரமச்சாரியாம் .
--------------------
Man1: ஏன் எல்லாரும்  ஓடுறாங்க ?
Man2: இது ரன்னிங் ரேஸ்ல ஜெயிகிரவங்களுக்கு  கப்  தருவாங்க ..!
Man1: ஹா , ஹா , ஹா ஜெயிகிரவன்   கப்  வாங்குறதுக்கு  மற்றவர்கள் ஏன்  ஓடுறாங்க ?  
-----------------
Boy1: டேய்   நாளைக்கு  நான் சினிமாக்கு  போறேன்  வரியா  டா...?
Boy2: முடிஞ்சா  வரேன்  டா 
Boy1: முடிஞ்ச பிறகு  ஏன்டா  வர ? படம்  ஆரம்பிக்கும்  போது வாடா. 
----------------------


திரை விமர்சனம்- எங்கேயும் காதல்

வேற வேல பொழப்பே இல்லாமல் சும்மா படம்மா பார்த்து தள்ளுகிறேன். நேத்து இரண்டாம் ஆட்டம் " எங்கேயும் காதல் " போய் இருந்தோம். பார்த்த தியேட்டர் ஒரு கொடுமைனா, படம் அதை விட செம கொடுமை. இதுல விமர்சனம்னு ஒன்னு போட்டா அதை விட ஒரு கொடுமை வேற ஏதும் இல்லை. 

படத்தில் கிளைமாக்சில் ஒரு புறா ஜெயம் ரவியீன் காதல் கடிதத்தை தனது கால்களில் எடுத்து கொண்டு , ஹீரோயீன் இடம் கொண்டு சேர்க்கிறது. பின்னர் இருவரும் ஒன்று சேர்கிறார்களாம். கருமம்ட சாமி. பிரபு தேவா மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்கார். நாம எல்லாம் சுத்த மட சாம்பிராணிகள் , என்னத்த காட்டினாலும் பார்ப்போம் என்று நினச்சுட்டு இருக்கார் போல. ஜெயம் ரவி இப்படி இன்னும் ஒரு படம் நடித்தால் போதும் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் இருந்தே காணமல் பொய் விடுவார். 

ஹன்சிகா மோத்வாணி வழக்கம் போல பணக்கார அப்பாவின் லூசு பொண்ணாக வருகிறார். . வழக்கமா ஹீரோக்கு தான் ஹீரோயீன பார்த்த வுடன் காதல் பத்திக்கும் ஆனா இதுல ஹன்சிகவுக்கு ஜெயம் ரவியை பார்த்தவுடன் காதல் பத்திக்கிச்சு.ஆனா ரவிக்கு ஹன்சிகா மேல் எதற்கு காதல் ஏற்ப்பட்டது என்பதற்கு எந்த சீனும் இல்லை. 

படம் முழுக்க ஜெயம்  ரவி , மோத்வாணி, சுமன் , ராசு சுந்தரம் , இவர்கள் தான் வருகிறார்கள். அப்புறம் ஆ ..வூ னா பாட்ட போட்டு விடுகிறார்கள் . பிரபு தேவாவுக்கு எதுக்கு பாட்டு என்று தெரியவில்லை . அதுவும் பேர் போட்ட உடனே பாடிவிட்டு போகிறார். இடை வேளைக்கு அப்புறம் உடனே பாட்டு . இடை வேளைக்கு அப்புறம் பாட்டு போட்டால் யாரும் எழுந்திருத்து போக மாட்டார்கள் என்ற தகிரியம்.

படம் பாரிசில் எடுத்து இருகிறார்கள். இது வரை சினிமாவில் பார்க்காத லொகேஷனை பார்க்கலாம். படத்தில் ராசு சுந்தரம் செய்யும் காமெடி  மட்டும் தான் ஒரே ஆறுதல் . அது கூட Mr . Bean னோட   இந்தியன்  வெர்சன் . இந்த வருஷத்தின் மிக கொடுமையான படம் என்ற தகுதி இதற்க்கு உண்டு. இதை யாரும் மிஞ்ச மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கேயும் காதல் இருக்குனு எங்களுக்கும் தெரியும்டா வென்று... ! 


Tuesday, May 3, 2011

திரை விமர்சனம்- "கோ" & " வானம் "

விடுமுறைல வந்து சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படியே ரெண்டு படமும் பார்த்து விட்டேன். ( கோ , வானம் ) . இங்க இப்போ நல்ல மழை. அதனால் வெயில் அவ்வளவாக  தெரிய வில்லை.

" கோ " படத்தை கோயம்பத்தூரில் பார்த்தேன். நன்றாக இருந்தது. அங்கெங்கே கொஞ்சம் லாஜிக் உதைத்தாலும் ஒரு பத்திரிக்கை நிருபர் , போட்டோ கிராபர் , எப்படி எல்லாம் ஒரு ஆட்சியை மாற்ற முடியும் என்பதை வித்தியாசமாக காட்டி உள்ளார்கள். ஜீவா ஒரு போட்டோ கிராபர்ராக நன்றாக பொருந்துகிறார். பாம்ப் வெடித்த போதும் கூட ஓடி ஓடி புகை படம் எடுத்து ஒரு போட்டோ கிராபர்ரின் கடமையை நிலை நாட்டுகிறார். " பாம்ப் தான் வெடித்து விட்டதே போய் அடி பட்டவர்களுக்கு உதவி செய்யல்லாம் இல்ல அத விட்டுட்டு படம் எடுத்துட்டு இருக்கான் பரதேசி "னு தங்கமணி சொன்னார். ஒரு போட்டோ கிராபராக அவர் அதை தான் செய்யனும், அதை தான் இயக்குனர் நன்றாக காட்டி உள்ளார் என்றேன். வரலாற்றை சொல்ல  ஒரு புகை படம் போதும் , (புலிச்சர் விருது பெற்ற வியட்நாம் Kim Phuc - நிர்வாண சிறுமி ஒரு உதாரணம் . வியட்நாமின் போர் அவலங்களை அது உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ..இப்படி நிறைய உதாரணங்களை சொல்லலாம் ). 


பாடல்கள் கேட்ட்கும் விதமாக உள்ளது . " என்னமோ ஏதோ " " அமிலி துமிழி நெளியும்"  இரண்டு பாடல்களும் அருமை. இன்னும்  கொஞ்ச நாட்களுக்கு இளைஞ்சர்களுக்கு இது தாம் செல் போனின் ரிங் டோன்னாக இருக்கும். பாடல்கள் எடுத்த இடங்களில் இயக்குனர் மிகவும் மெனக் கெட்டு இருப்பது தெரிய வருகிறது.  ராதாவின் மகள்  அடக்கி வாசித்து இருக்கிறார். ஆனால் அவருடைய புருவங்கள் தான் எனக்கு பிடிக்கவில்லை. வில்   போன்ற   புருவம்  என்று சொல்லுவார்கள்  ஆனால் அவருக்கு  நொம்பவுமே வளைந்து   இருக்கிறது. பியா நல்ல வாயாடி பெண்ணாக வந்து இடையில் அநியாமாக செத்து போகிறார். நல்ல படம். இயக்குனர் ஏன் கோ என்று பெயர் வைத்தார் என்று தான் தெரிய வில்லை. இதற்க்கு முன்னரும் அயன் என்று வைத்தார். படத்துக்கும் அயன்னுக்கும் என்ன தொடர்பு என்று இன்று வரை எனக்கு புரிய வில்லை. அதே மாதிரி  தான் " கோ" வும்.

======================================

வானம் படம் ஈரோட்டில் பார்த்தேன் . ஏண்டா பார்த்தேன் என்று நொந்து நூலாகி போனேன். படம் பார்த்து கொண்டு இருக்கும் போது 5 முறை பவர் கட். வாழ்க மின் வெட்டு. பாடல்கள் ஒன்று கூட புரியவில்லை. காதில் சத்தம் கேட்டு செவிடாகி போனது தான் மிச்சம். படத்தில்  அநியாயத்திற்கு க்ளோஸ் அப்  காட்சி வருகிறது . அதுவும் சோனியா அகர்வாலின் முகம் " உவ்வ்வே " ரகம். அதே மாதிரி பிரகாஷ்  ராஜ்   முகமும் .கன்னக் கொழுப்பு மினு மினுக்கிறது. கன்றாவி. சிம்பு முன்னை விட கொஞ்சம் உடம்பு போட்டு இருக்கிறார். சந்தானம் காமெடி நம்மை கொஞ்சமாக சிரிக்க வைக்க நொம்ப சிரம படுகிறார்.  வேற வழி இல்லை சிம்புவிற்கு. சேம் ஏஜ் காமடியனுக்கு அவரு பாவம் எங்க தான் போவார். வடிவேல் எலக்சனில் பிஸி ஆகி விட்டார். விவேக்கை போட்டு இருக்கலாம்.
படத்தின் இயக்குனர் நிறைய ராஜேஷ் குமார் , பட்டுகோட்டை பிரபாகர் நாவல்கள் எல்லாம் பார்ப்பார் போல இருக்கு. ஏன் என்றால் படத்தின் காட்சிகள்  எல்லாம் பிட்டு பிட்டாக வருகிறது.அவர்கள் நாவலில் தான் அத்தியாயம் 1 : இடம் : தூத்துக்குடி , அத்தியாயம் 2 : இடம் : சென்னை என வந்து எல்லாம் 9  தாவது அத்தியாயத்தில் ஒன்று சேரும் . அதே போல் இதிலும் இடை வேலைக்கு அப்புறம் எல்லாம் ஒன்று சேர்கிறது. அது கூட நாம் யூகிக்கும் வகையாக இருக்கிறது. புதுசாக வித்தியாசமாக செய்கிறாராம் . நமக்கு தலை கிறுகிறுத்தது தான் மிச்சம் . அட வித்தியாசமாக செய்யட்டும், அதுக்காக ஒவ்வொரு மூன்று நிமிசத்துக்கு ஒரு தடவை காட்சி மாறுவது கொடுமை. பிரகாஷ் ராஜின் பிளாஷ் பேக், பிளாஷ்பேக் தான என தடுமாற வைக்கிறது . ஒரு கொசு வர்த்தி சுருளை கட்டி இருக்கலாம் .
பரத் - எதோ ஒரு மூன்றாம் வகை ஹீரோ போன்று வந்துட்டு போகிறார். வேண்டாத வேலை. ஒரு முன்னணி ஹீரோ ஆனதுக்கு பிறகு இப்படி மற்ற ஹீரோ வுடன் ஏன் சேர்ந்து நடிக்க வேண்டும் அதுவும் உப்பு சப்பில்லாத ஒரு கதா பாத்திரதிர்க்காக. ஒரு வேலை சிம்புவின் ரசிகர்களை தன பக்கம் கொஞ்சம் ஈர்க்கலாம் என்ற நோக்கமாக இருக்கலாம். 

ஹிந்து ,முஸ்லீம்  ஒற்றுமை எப்படி பார்க்க படுகிறது , அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் ஆபிசர் ஒரு ஹிந்து வெறியராக இருந்ததால் என்ன என்ன விளைவுகள் ஏற்ப்பட்டது , போன்றவற்றை இயக்குனர் நன்றாக சொல்லி இருக்கிறார். அனால் அது மட்டுமே போதாதே ஒரு படம் வெற்றி அடைய. சிம்புவுக்கு ஏற்ற கதை களம் கிடையாது வானம். அதுவும் கேபிள் ராஜா கேரட்டர். வேறு எந்த கேரட்டரும் பொருந்தி இருக்கும். கட்டிடம் கட்டிடமாக தாவுவதர்கன சீன்கள் இருப்பதாலேயே கேபிள் ராஜா என்று பேர் வச்சு இருப்பாங்க போல் இருக்கு. 

கோ படத்தை பார்த்த பிறகு வானம் பார்த்த படியால் வானம் மனதில் ஓட்ட வில்லை. சுத்தமாக பிடிக்க வில்லை. நண்பர் சொன்னார், கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டியதாம். ஹீரோயீனை மாத்து என்று தொல்லை கொடுத்ததினால் , ஜீவாவை போட்டார்கள் என்று. இந்த விசயத்தில் சிம்பு ஜீவாவுக்கு உதவி செய்து உள்ளார். ஜீவாவின் நிலை உயர்ந்து உள்ளது. சிம்பு  கோ வில் நடித்து இருந்தால் அது அவரை மேலும் உயர்த்தி இருக்கும். கடைசியில் இறந்து போவது மாதிரி வந்தால் , ஒரு சிம்பத்தி அலை அடித்து படம் ஓடி ... நல்ல வசூலை தந்து ...மார்கெட் உயர்ந்து ....இப்படி எல்ல்லாம் சிம்பு நினது இருந்தால் , தப்பு கணக்கு போட்டுட்டார்.   

Thursday, April 28, 2011

த(பி)த்துவம்

'யானை  மேல நாம உக்காந்து போன அது  "saffari", அதே யானை நம்ம மேல உக்காந்து போன ஒப்பாரி...!
---------------------------------------------
நாம் அடிச்சுக்கிட்ட அதுக்கு பேர் மொட்டை ..,அதுவா விழுந்தா அதுக்கு பேர் சொட்டை...
----------------------------------------------
லைப்ல  ஒண்ணுமே  இல்லனா போர்  அடிக்கும் ... தலைல  ஒண்ணுமே இல்லனா  க்ளேர்  அடிக்கும் .. !
----------------------------------------------
பல்  வலி  வந்தா பல்ல  புடுங்கலாம் ....ஆனா ... கால்  வலி  வந்தா  கால  புடுங்க  முடியுமா  ?! இல்ல  தலை  வலி  வந்தா, தலைய தான்  புடுங்க  முடியுமா ?
---------------------------------------------------------
School டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ...
College டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ஆனா  ...
Blood Testla பிட்  அடிக்க   முடியுமா ?
---------------------------------------------------------
என்ன  தான்  பிகரு  செவப்பா இருந்தாலும் ,
அவ  நெழல்  கருப்பா தன்  இருக்கும்  
---------------------------------------------------------
ஒருத்தன்  எவ்வளவு  தன்  குண்டா இருந்தாலும் ,
அவன  துப்பாக்கி  குள்ள  போட முடியாஉ .
---------------------------------------------------------
மண்டைய  போட்டா Die
மண்டைல  போட்டா  டை...!
---------------------------------------------------------- 
பின்னாடி  சக்கரம்  எவ்வளவு  வேகமா  போனாலும்  முன்னாடி  சக்கரத்த முந்தி  போக  முடியாது ...!!

தாமதம்

ஸ்..ஸ்..ஸ்...அப்பப்பா நாலு மாசதுள்ள மூன்று  தடவை வீடு மாத்தியாச்சு . மனுஷனுக்கு வாழ்கையே வெறுத்து போச்சு. இப்போ கிடச்ச (2 BHK ) வீடு நிரந்தரம் . போஸ்டிங் போக வரைக்கும் இங்கே இருக்கலாம் . எப்பா... ஒவ்வொரு முறையும் சாமானத்தை தூக்கி கொண்டு அலைவது என்பது நொம்ப கஷ்டம்மடா  சாமி . மிக்ஸி ,கிரைண்டர் , இப்படி பெரிய பெரிய சாமான்களை ஷிபிட் பண்ணுவது என்பதில் ஒரு பெரிய சிரமமே இருப்பது இல்லை.

இந்த சின்ன சின்ன சாமான்கள் தான் பெரிய தலை வலி. அதுல பாருங்க ,இந்த சின்ன சின்ன சாமான்கள் தான் நாம நெறைய நேரம் யூஸ் பண்ணுவோம். உதரணமாக , இந்த பேஸ்ட் , ஷேவிங் கிரீம் , பிரஷ் , சூ பாலிஷ்  இப்படி. வீடு ஷிபிட் பண்ணுன அடுத்த நாள் ஆபிஸ் போக ரெடி ஆகிக்கொண்டு இருக்கும் போது ஷேவிங் ரேசரை எங்கயோ வைத்து விட்டு நொம்ப டென்சன் ஆய்ட்டேன். கடைசில ஒரு மொன்ன  பிளேடுல சரச்சுட்டு போனேன். என்ன மாதிரி 5  வருடங்களுக்கு ஒரு முறை ட்ரான்ஸ்பர் ஆகும் மக்கள் உண்மையிலேயே நொம்ப பரிதாவதுக்கு உரிய ஜீவன்கள். 

இப்போ லீவுல தமிழ் நாடு வந்து உள்ளேன். இப்போ தான் எலக்சன் முடிஞ்சு எல்லோரும் அமைதியாக இருக்காங்க .பஸ்சுல கலைஞ்சர் பொன் மொழிகள் " வெள்ளி என்னும் ..." ஸ்டிக்கர்ல கூட மஞ்ச பெயிண்ட் அடிச்சு வச்சு இருக்காங்க .எலக்சன் கமிசன் கண்ணுல விரல விட்டு ஆட்டி இருக்கானகனு தெரிய வருது. ஆனாலும் நொம்ப இடத்துல பணம் விளையாடி இருக்காம். பார்க்கலாம் ரிசல்ட் வர அன்னைக்கு நான் இங்க தான் இருப்பேன். இப்படி நெட் செண்டர்ல உக்காந்து டைப் பண்ணுவது நொம்ப கஷ்டமா இருக்கு. அது போக இங்க கோபில ஒரு மணி நேரத்துக்கு 30 /= ருபாய். நொம்ப அநியாயம். ஈரோட்டுல 15 /=  தான் வாங்குறாங்க . ரெண்டு பதிப்ப போடுறதுக்கு பேப்பருல எழுதி வச்சு இருக்கேன்,அனேகமாக சனிக்கிழமை பதிப்ப போடுவேன் என நினைக்குறேன். அதுவரைக்கும் இப்போ என்னோட அலை பேசி குறுஞ்செய்திகளை படியுங்கள் .

Friday, April 15, 2011

குறுஞ்செய்திகள்

ஆள் 1 : என் மனைவி சமைச்சா நான் மூக்கு பிடிக்க சாய்பிடுவேன்.நீங்க ...?
ஆள் 2 : என் மனைவி சமைச்சா  நான் மூக்க பிடிச்சுட்டு தான் சாப்பிடுவேன் 
--------------------------------------------------------------------------
நேத்து  பஸ்ல  போயிட்டு  இருந்தப்ப ,ஒருத்தர்  சோல்டர்ல அடிச்சு , "ராயபேட்டை "யா 'ன்னு  கேட்டாரா,நான்  இல்ல  என்  "தோள்பட்ட " ன்னு  சொன்னேன் . ஆனா  ஏன்  என்னை  முறைச்சாருனு தெரியல ! 
-------------------------------------------------------------------------
ப்ரோட்யுசர்: "படத்தோட  பேரை  கேட்டாலே ஸ்கூல் ,காலேஜ் ,ஸ்டூடண்ட்ஸ், 
govt & private எம்ப்லாயீஸ் எல்லாம் ஆடிரனும் அப்படி  ஒரு  டைட்டில்  சொல்லுங்க ...."
டைரக்டர் : "sunday Working day"....!
------------------------------------------------------------------------
கலைஞர் : தமிழர்களே  ! தமிழர்களே  !என்னை  கடலில்  தூக்கி  போட்டாலும் கட்டு  மரமாக  தன  மிதப்பேன் !
ஜப்பான்  மினிஸ்டர் : ங்கொய்யால நீ  இங்க  வாடி ! 
-------------------------------------------------------------------------
டைரக்டர் : சினிமா  என்கிறது என்  ரத்தத்துல  ஊரினது .
Fan: அது  சரி , நீங்க  ஏன்  ஒரு  மாதிரியான  படமாவே  எடுகிறீங்க ?
Director: என்  இரத்தம் ‘A’ குரூப்  இரத்தம் , அதான் .
----------------------------------------------------------------------------
"நான்  மியூசிக்  போட்ட இந்த  படத்துல  இடைவேளைக்கு  முன்னாடி  3 பாட்டு , இடைவேளைக்கு  அப்பறம்  2 பாட்டு  இருக்கு ."

"அப்ப  படத்துல  மொத்தம்  6 இடைவேளைன்னு  சொல்லுங்க ! "
---------------------------------------------------------------------------

த(பி)த்துவம்

இருமல்  வந்தா  இரும முடியும் ஆனா காய்ச்சல் வந்தா காச்ச முடியாது இது தான் வாழ்க்கை.
-----------------------------------------------------------------------------------------
என்னதான் பாடத்துள்ள 100 க்கு 100  வாங்கினாலும் , ஆம்லேட் போட 'முட்டை 'வாங்கி தான் ஆகணும்.
----------------------------------------------------------------------------------------
டிக்கெட்  வாங்கிட்டு  உள்ளே  போன  அது  சினிமா  தியேட்டர் ,உள்ளே  போயி  டிக்கெட்  வாங்கினா  அது  ஆபரேஷன்  தியேட்டர்.
---------------------------------------------------------------------------------------
வாழ்க்கைல  ஒன்னுமே  இல்லன  போர்  அடிக்கும் ,
மண்டையில  ஒன்னுமே  இல்லன  கிளார் அடிக்கும்
----------------------------------------------------------------------------------------
மின்னல்ல  பார்த்தா கண்ணு  போயிரும் , பார்க்கலேனா  மின்னல்   போயிரும்
----------------------------------------------------------------------------------------
டீ மாஸ்டர்  எவ்வளவு  தான் லைட்டா டீ போட்டாலும் ,அதுல  இருந்து  வெளிச்சம்  அடிக்காது .
----------------------------------------------------------------------------------------
என்னதான்  நாய்க்கு  நாலு  கால்  இருந்தாலும் ,அதால ஒரு லோக்கல் கால் கூட பண்ண முடியாது.
----------------------------------------------------------------------------------------
நாய்  கிட்ட  போய் டைகர்  பிஸ்கட்  போட்டா, அது  உங்கள  விட்டுட்டு  பிஸ்கட்ட சாபிட்டுடும் ,ஆனா  டைகர்  கிட்ட  போய்  நாய்  பிஸ்கட்  போட்டா , அது  பிஸ்கட்ட விட்டுட்டு  உங்கள சாபிட்டுடும்.
---------------------------------------------------------------------------------------
நாய் எவ்வளவு  தான்  நன்றி  உள்ள  பிராணியா இருந்தாலும் ,அதால 'thank you' சொல்ல  முடியாது .
----------------------------------------------------------------------------------------
என்னதான்  நெருப்பு  கோழியா இருந்தாலும் , முட்டைய  "ஹால்ப் பாயில்லா"  போடாது.
----------------------------------------------------------------------------------------

Thursday, April 7, 2011

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

கோர்ட்ல , சென்னை   தமிழ்  யூஸ்   பண்ணின   எப்படி  இருக்கும் : 
1.Yes my lord- ஆமா  நைனா 
2.Objection my lord- அமிக்கி  வாசி  அண்ணாத்தே ,
3.Court adjourned- உன்னொரு    தபா  வெச்சுக்கலாம் 
4.Objection over ruled- மூடிக்குனு   குந்து .
5.Order Order- கம்முனு  கிடமே.
------------------------------------------
உயிர்  இல்லாத  மலரை  கூட  நாம் நேசிக்கிறோம் ,
ஆனால்  நமக்க  உயிரையே  கொடுபவர்களை  மட்டும்  நேசிக்க  ஏன் யோசிக்கிறோம்  .
So love

.
.
.
.
.

சிக்கன் , மட்டன்   & பிஷ் ..!
------------------------------------------------
கம்பி  1,கம்பி  2,கம்பி  3,கம்பி  4,கம்பி  5,கம்பி  6,கம்பி  7,கம்பி  8,கம்பி, ...
எப்படி  பிளான்  பண்ணி   உங்கள  கம்பி ( என்ன ) எண்ண வச்சேன்  பார்த்தீங்களா?


Tuesday, April 5, 2011

எலக்சன் ...!

எலக்சன் ...!

டுபுக்கு அவர்கள் தன்னுடைய பதிவில் இந்த எலக்சன் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு சிறிய குறும்படம் தந்து உள்ளார் . 
 அதை காண இங்கு வரவும் அல்லது யூ டூபில் பார்க்கவும்.

Sunday, April 3, 2011

த(பி)த்துவம்

லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ,ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல்ல கொண்டு போக முடியாது . இது தான் வாழ்க்கை .

-------------------------------------------------------
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு. 
--------------------------------------------------------
கார்க்குள்ள டயர் இருந்தா அதன் பெயர் ஸ்ட்ப்புனி, ஆனா அதே டயர் நம்ம மேல இருந்தா  நாம சட்டினி . 
-------------------------------------------------------
நம்ம வாயல "நாய்னு " சொல்ல முடியும் ,ஆனா நாய் வாயால " வாய்னு சொல்ல முடியாது. 
-------------------------------------------------------
சைக்கிள்ல போன சைக்கிள் ஸ்டான்ட் கூட வரும், பைக்ல போனாலும் பைக் ஸ்டான்ட் கூட வரும் , அட ஸ்கூட்டர்ல போன கூட ஸ்கூட்டர் ஸ்டான்ட் கூட வரும் ஆனா பஸ்ல போன பஸ் ஸ்டான்ட் கூட வரத்து . இது தான் வாழ்க்கையின் தத்துவம். 
-------------------------------------------------------
பஸ்ல நாம ஏறினாலும் , பஸ் நம்ம மேல ஏறினாலும் டிக்கெட் வாங்க போறது என்னவோ நாம தான் ...!
--------------------------------------------------------

Saturday, April 2, 2011

சூரிய கிரண்

சூரிய கிரண்

சூரிய கதிர் என்று ஹிந்தியில் சொல்லப்படும் சூரிய கிரண் என்ற வார்தைகளுக்கு ஒரு தனி பெருமை இந்திய விமான படையில் உண்டு. சூரிய கிரண் என்பது 09 விமானங்கள் சேர்ந்த ஒரு ஏரோபடிக் குழு . உலகதில் 09 விமானங்களை கொண்ட ஏரோபடிக் குழு மொத்தம் மூன்று தான் உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. ( மற்ற இரண்டு ப்ரிடீஷ்- ரெட் ஏரோஸ், கனடா -ஸ்னௌ பேர்ட்ஸ் ) சூரிய கிரண் 1996 ல் ஆரம்பிக்க பட்டது. அதற்க்கு முன்னர் "தண்டெர் போல்ட் " என்ற பெயரில் ஹாவக் ஹன்டெர் விமானங்களை கொண்டு இருந்தது. விமான படையின் தூதுவராகவும் , இந்திய விமான படையின் திறமையை காட்டவும் சூரிய கிரண் அமைக்கப்பட்டது.




குறிப்பு : இந்த விடியோவை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SLOW DOWNLOAD   பட்டனை அமுக்கவும் , ஒரு 65 வினாடிகள் பொருத்து டவுன்லோட் ஆரம்பிக்கும் VLC பிளேயர்ரில் ப்ளே செய்யவும் .

விமான படையில் விமானியாக சேரும் அதிகாரிகள் முதலில் HP-32 என்று அழைக்கப்படும் ப்ரொபெல்லர் ( மூக்கின் முன் ஒரு காத்தாடி வச்சுட்டு விர் ரும்..ம்ம்..ம்..ம்ம்.ம்.ம்..சத்தம் போட்டுட்டு போகுமே அது தான் )விமானதில் பயிற்ச்சி பெருவார்கள். அதுக்கு அப்புறம் பெரிய ஜெட் விமானகளை ஒட்டி பழகும் முன் இந்த கிரணை பழக வேனும் .அதாவது புல்லெட் பைக்கை ஒட்டி பழகரதுக்கு முன்னாடி டிவிஎஸ் 50 ஒட்டி பழகரது மாதிரினு வசுக்கோங்க. இந்த சூரிய கிரண்ல இருக்குற பைலட்டுங்க எல்லாம் பறக்கறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்க .குறைட்ந்த பட்சம் 2000 மனி நேரம் வானத்தில் பறந்த அனுபவம் வேண்டும் அது போக கடுமையான சோதனைகளுக்கு அப்புறம் தான் இதில் சேர்துக்குவாங்க. Fighter Pilot மட்டுமே சேர முடியும். பொதுவாக MIG-27,MIG-29,MIRAGE 2000 ல் பைலட்டாக இருந்தவர்கள் கிரணில் வருவார்கள். இதில் இன்னொரு விசேசம் எண்ணனா இது இரண்டு பெர் அமரகூடியது. ஆன எல்லா பயிற்சி விமானங்களில் முன்னாடி ,பின்னாடி என்ற அமைப்பில் தான் சீட் இருக்கும். ஆனல் இதில் பக்கது பக்கதில் இருக்கும். அதாவது இரண்டு பேர் போர கார் மாதிரி.

நல்லா கண்ணை பறிக்கும் விதமான ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்த வண்ணத்தில் இருக்கும். இவர்கள் செய்யும் ஏரோபடிக்கை பார்த்தாள் மயிர் கூச்செரியும்.மேலோட்டமாக பார்கையில் ஏதோ பறப்பது போல தோனும். ஆனால் ஒரு முலுமையான மன ஒருமைப்பாடு மற்றும் குழுவுகலுக்கு இடையேயான ஒத்துலைப்பு மிக மிக அவசியம். கரணம் தப்பினானால் ( கிரணில் ) மரணம் என்பது மிக உண்மை இங்கே. ( 2006 , 2009 ல் இரண்டு விபத்து நடந்து, விமானிகள் மரணம் அடைந்து உள்ளனர். )

Tuesday, March 29, 2011

த(பி)த்துவம்...!

சிற்பி  கல்லை  உளியால  அடிச்சா  அது  “கலை ”ஆனா ...
நாம   சிர்பிய  உளியால  அடிச்சா அது "கொலை"
----------------------------------------------------------------------
பாக்கு மரத்துல  பாக்கு  இருக்கும் , தேக்கு மரத்துல  தேக்கு  இருக்கும் , ஆனா  பண  மரத்துல  பணம்  இருக்காது ..!!
------------------------------------------------------------------------
வாழ  மரம்  தார்  போடும் ! ஆனா  அதா  வச்சி  ரோடு  போடா  முடியாது..!
------------------------------------------------------------------------

பட்டர் ப்ளை  ப்ளை ஆகும்  ........ கேட்டர்'பில்லர்  பில்லர்  ஆகுமா ?
------------------------------------------------------------------------
உள்ளே இருக்கும் வரைக்கும் தான் பிராந்தி , வெளியே வந்தா அதுக்கு பேர் வாந்தி ...!

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

ஹோட்டலில் :
சர்வர் : என்ன வேணும் சார்..?
நபர்: சப்பாத்தி உப்புமா ..!
சர்வர் : சாரி சார் , சப்பாத்தி உப்பது , பூரி தான் உப்பும் .

================================

நபர்: சார் சார் என் பொண்டாட்டிய நாலு நாளா காணோம் ...! கண்டுபிடுச்சு கொடுங்க
மற்றொரு நபர் :  யோவ் , இது போஸ்ட் ஆபிஸ் ...பொய் போலிஷ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் பண்ணு .
நபர்: ஹய்யோ ஹய்யோ சந்தோசத்துல எங்க போறதுனே தெரியமாட்டேன்குதே .

============================================
6 birds sitting in a tree..
A man ready 2 shoot
5 birds fly away.
But 1 bird was sitting.
why?
கொழுப்பு …
உன்ன  மாதிரி  .. 
============================================

திருடன் 1: ராத்திரி  எவ்வளவு  திருடினோம்  என்று  எண்ணாமலே  , பந்த  ஒளிச்சு  வச்சுடோமே
திருடன் 2: No problem, நாளைக்கு  பேப்பர்ல  வரும்ல , அப்பம்  பார்த்துகலாம்.
=============================================
என்னையும் , ஒன்னையும்  சேர்த்து  பார்க்கணும்  போல  இருக்கா ?
...Press down...
.
.
.
.
"N1"...
என்ன  பார்த்தாச்சா  இப்படி  தான்  புதுசு  புதுசா  யோசிக்கோனுகறது . 

Wednesday, March 23, 2011

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

என் அலை பேசி குறுஞ்செய்திகள்
 இந்த  தலைப்பில் என்னுடைய அலை பேசியில்  உள்ள குறுஞ்செய்திகளை போடலாம் என உள்ளேன். அவ்ளோ தான் இவன் கிட்ட பதிப்பு போடுவதற்கு எந்த மேட்டரும் இல்லை. பையன் காலி , நாம எல்லோரும் தப்புசோம்nu நீங்க ஆனத கூத்தாடி பல்லு பள்ளு பாட வேண்டாம் . நெறைய மேட்டர் கை வசம் உள்ளது. ஊடு மாத்தினதுல  கொஞ்சம் பதிவ போட முடியல . அப்புறம் , கொஞ்சம் முகப்பு பகுதி தோற்றத்தை மாற்றி உள்ளேன். இந்த template புடிச்சு  இருக்கா ...? வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக சிறிது மாற்றம் செய்து உள்ளேன்.

Wednesday, March 2, 2011

அழகான கவிதைகள் ...!

அழகான கவிதைகள் ...!

இம்சை அரசியீன் கவிதைகளை வாசிக்க நேர்ந்தது.

நேஹா குட்டி உருவாக்கும் அம்மாவின் உலகம்!

முத்தம் சிந்தும் நேரம்!

 மிகவும் ரசித்தேன் ...! நீங்களும் தான் போய் பாருங்களேன்...!

Tuesday, February 22, 2011

துப்பாக்கி ...!

டார்கெட்
" come on quick ....! come by double ...." GTI  கத்தினார். எல்லோரும் அவரவர் டார்கெட் பேப்பரை டார்கெட்டில் மாட்டி விட்டு " டப்.. டப்.." என ஓடி வந்தோம். இந்த ரெண்டரை கிலோ ஸூவை போட்டுட்டு  ஓடுவது என்பது  கொஞ்சம் கஷ்டம் தான். காலுல  இவ்ளோ வெய்ட்டா யாராவது  ஸூ  போடுவாங்களா ... இதை  எப்படி  மிலிடரிக்கு  வந்ததுன்னு யோசிச்சுட்டே ஓடி வந்தேன் .
GTI : " யாரவது டார்கெட்டை தவிர வேறு எங்காவது ஃ பயர் பண்ணினா தொலைச்சு போடுவேன் தொலைச்சு...! " ஹிந்தியல் கத்தினார்.
எல்லோரும் அவரவர் டார்கெட்க்கு நேர் எதிரில்  விறைப்பாக நின்று கொண்டு இருந்தோம் .
"ஓகே. Lying position Take...."
INSAS
அனைவரும்  தொப்  தொப்  என தரையில்  விழுந்து  குப்புற  படுத்தோம் . முன்னால்  INSAS துப்பாக்கி  ஒன்னும் தெரியாத அப்பாவி போல கிடந்தது. எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னன்னா ,இப்படி குப்பற படுத்துட்டு சுடுறது தான். WAR வந்துச்சுன்னா யாரும் இப்படி குப்பற சுட்டுட்டு இருப்பாங்களா என்ன ...?  ( ஆனா இந்த பொசிசன்ல இருந்து சுட்டா குறி தவறாது என்பது உண்மை ...)

" Pick up your Gun ...and cock it and check "

முன்னால் கிடந்த துப்பாக்கியை ஒரு கையால் எடுத்து ,தோலில் முட்ட கொடுத்துட்டு, கன்னத்தை துப்பாக்கயீன் butt  பகுதி பக்கத்தில் வைத்து , இடது கண்ணை மூடி
இன்சாஸ் LMG
,வலது கண்ணின் வழியே பேக் சைட்  ப்ரோடேக்டோர் ஓட்டையீன் வழியே என்னோட டார்கெட் பேப்பரின் புல் ( Bull ) பகுதியை பார்த்தேன் . நன்றாக தெரிந்தது. ஒழுங்காக "zeroing " பண்ணி இருக்க வேண்டும்... இல்லனா நாம ஒரு பக்கம் சுட்டா அது ஒரு பக்கம் போகும்.
ஹி...ஹி... சத்தியமாய் நான் இல்ல ...!
இடது கையால் , லீவரை பிடித்து காக் செய்து விட்டேன் ."கலக் கடக்" என அருமையாக எந்த வித தடங்களும் இல்லாமல் காக் ஆகியது. மனம் திருப்பதி பட்டு கொண்டது. டார்கெட்டை குறி பார்த்து , ட்டிகரை மெதுவாக பின்னோக்கி நகர்த்தினேன்...

Tuesday, February 8, 2011

யாரை குற்றம் சொல்ல..!

கடந்த  ஒரு  வாரமாக  ஆணி  புடுங்கிற வேலை  அதிகம்  ஆய்டுச்சு . அதான்  பதிவு  போட முடியவில்லை  ...( ஆமா , உன்  பதிவ  அப்படியே  ஒரு  1000 பேர்  டெய்லி  படிக்கிற  மாதிரி  ...போடா ,உனக்கே  இது  ஓவரா  தெரியல ...< அது  என்ன  மாயமோ  ,இல்ல  மந்திரமோ  தெரியல  இப்ப  எல்லாம்  என்னோட  மைன்ட்  வாய்ஸ்  ( அதாங்க  மனசாச்சி )அடிக்கடி  பேசுது  >.சரி  மேட்டர்க்கு வரேன் .
அதாவது  விஷயம்  என்னன்னா .... எனக்கு   ஒரு  சந்தேகம் ,நியூ போஸ்ட் டைப் பண்ணும்  போது  அப்படியே  தங்கிலீஷ்ல  டைப்  பண்ணுவது  நொம்ப  கஷ்ட்டமா  இருக்கு  . எல்லோரும்  இப்படி  தான்  லொங்கு  லொங்குனு  டைப்  பண்ணுறீங்களா  இல்ல , இதுக்குன்னு  ஏதாவது  மென்  பொருள்  உபயோக  படுதுறீன்களா ? அப்படி  ஏதாவது   இருந்தா  தயவு  கூர்ந்து  இந்த  ஏழை  பதிவலனுக்கு  உதவுமாறு  உங்களை  இரு  கரம் கூப்பி  கேட்டு  கொள்கிறேன் . sms ல  தான்  தமிழை  அப்படியே  ஆங்கிலத்தில்  டைப்  பன்னி அனுப்புறோம். ப்ளாக்லேயும் அதே முறை தானா ? அதுவும்  இல்லாமல் , இந்த  "யில் " சில  சமயம்  வருது  சில சமயம் "யேல்"  னு  வந்து  விழுது . சரியான  இணைப்பு  கிடைக்குறது  குள்ளார தாவு  தீர்ந்து  போகுதுடா  சாமி . இப்படி  சில  சொற்களை , டிராப்டில்  சேவ் பன்னி  வைத்து  இருக்கேன் . வேணும்மா, காப்பி  பேஸ்ட்  பன்னி  தான்  பதிவ  போடுறேன் .

 இதோட  விளைவு  நான்  ஒரு  தடவை  ஒரு  மனு  எழுதும்  போது  வந்தது . பெறுனர்னு தமிழ்ல  எழுதுறதுக்கு பதிலா "perunarnu "  இங்கிலீஷ்ல  எழுதி  தொலைச்சுட்டேன்.இப்ப  எல்லாம்  தமிழ்ல  வேகமா  எழுதறதை  விட  இங்கிலிஷ்ல  அதே  "டமில்லை"  வேகமா  டைப்  பண்ண  முடிகிறது . இது  எங்க  போய்  முடியுமோ  தெரியல .

ஆனால்  இதுல  ஒரு  சவுரியம்  இருக்க  தான்  செய்கிறது . சில  சமயம் எந்த   "ல"  or எந்த  "னா"னு  குழம்பிட்டு  இருக்கும் போது  அதே  தன்னப்போல  வார்த்தைகளாக வந்து விழும் போது ,அட கம்யுட்டரே சொல்லுது தப்பாக இருக்காதுன்னு விட்டுர்றேன் .முடிஞ்ச அளவுக்கு  நான்  தமிழ்ல  தப்பு  இல்லாம  எழுதனும்னு  முடிவு  பன்னி  உள்ளேன் .

ஆரம்ப  பள்ளி  கூட  நாட்களில்  நான்  தமிழை  நன்கு  படிக்காதது  ஒரு  காரணமாக  இருக்கலாம் . அப்போது  எல்லாம்  இப்போ  இருப்பதை  போல  வீதிக்கு  ஒரு  பள்ளி  கூடம்  கிடையாது . அப்பா  டிபன்சில்  இருந்து  வந்து  வேலை  தேடும்  போது  நான்  என்  அம்மா  வழி  பாட்டி வீட்டில்  தான்  தங்க  நேர்ந்தது . அதுவும்  இல்லாமல்  அப்பா  வழி  பாட்டி  ,தாத்தா எப்போவே  இறந்து  போய்  இருந்தார்கள் . நான்  ஊ .ஒ . ஆ . து  . பள்ளியில்  மூன்றாம்  வகுப்பு  சேர்ந்த  போது ,எனக்கு   அந்த  வாத்தியார்  ஹிந்தில்  தமிழையும் ,கணக்கையும்  சொல்லி  கொடுத்தார் . உயிர்  எழுத்தையும் , மெய்  எழுத்தையும்  எழுதி  மனப்பாடம்  பன்னி  சேர்த்தறதுகுள்ளார  எனக்கு  தெரிஞ்சு  இருந்த கொஞ்ச  நஞ்ச  ஹிந்தியும்  மறந்து  போச்சு . கேலியும்  ,கிண்டலின்  சிரிப்புகள் இடையே  நான்  நண்பர்களை  உருவாகி  கொள்வதற்கு  மிகவும்  சிரம  பட  வேண்டியதாக  போய்டுச்சு
( நான் : " அம்மா  க்யுன்  பச்சேன் லோக்  ,முஜ்சே பாத்  நஹி  கர்ரஹா "
அம்மா : அவங்களுக்கு  ஹிந்தி  தெரியாது  இல்ல  அதான் , நீ  அவங்க  கூட  தமிழ்ல  பேசு  அவங்க  உனக்கு  பிரண்ட் ஆவாங்க ...).
அது  போக  தமிழ்ல  246 எழுத்து  இருக்குனு   தெரிய  வந்த  போது  எனக்கு  ஜுரமே  வந்து  ஒரு  நாலு நாள்  காச்சலில்  இருந்தேன் .. அதுவும்  இந்த  "ஞா" படுத்திய  பாடு  கொஞ்ச  நஞ்சம்  இல்ல . ஹிந்தியும் , தமிழும்  கலந்து " ஞா"  வை ஒரு  மாதிரி  "ஞ்நூ" னு  சொல்லுவேன்  . வாத்தியார்  தலையை  பிசுக்குவார் .

Wednesday, January 19, 2011

காதுல பூ...!

ஆனாலும் இந்த ராஜ் டிவி காரங்க மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்காங்க. நேத்து ராத்திரி " தெரியும்மா சினிமா "னு ஒரு நிகழ்ச்சி. அதுல மாதவனோட போடோவையும் ,கமல்ஹாசனோட போடோவையும் ஒரு விதமா இணைச்சு , இதுல இருக்கிற நடிகர்கள் யாருன்னு போன் பன்னி சொன்னா, நமக்கு 40 ,000 /= தருவாங்களாம். ஒரு நிமிசத்திற்கு 10 /= மட்டும் தான் செலவு ஆகும். நாலாவது படிக்கும் என் அக்கா வீட்டு பையன் கூட அத பார்த்துட்டு " மாமா ,இது மாதவனும் ,கமல் அங்கிளும் "னு சரியாய் சொல்லிட்டான்.
மேட்டர் அது இல்ல , சில பேர் போன் பன்னி "அஜீத்தும் , சரத்குமாரும் "னு சொல்லுறாங்க, இல்லைனா " விஜயும்  சத்தியராஜு"ம்னு சொல்லுறாங்க . இதுக்கு ரெண்டு நிகழ்ச்சி  தொகுப்பாளர்கள் வேற. நல்லா காதுல சுத்துறாங்க . கேக்கிறவன் கேனயன்னா, எலி ஏரோ பிளேன் ஓட்டுமாம்....!  அப்புறம் லீகல் அறிவிப்பு வேற  நாம கால் பண்ணும் போது ஹோல்டுல போக சான்ஸ் இருக்காம் , அப்படி இருந்தா  கட் பண்ணிட்டு மறுக்கா கூப்பிட்டா போதுமாம் . எந்த மடையன் கால் பண்ணுவாங்கனு நினச்சுட்டு இவங்க இப்படி எல்லாம் நிகழ்ச்சிய காட்டுறாங்க. சும்மா போங்குக்கு, அவங்க ஆளே போன் பன்னி ,தப்பு தப்பா சொல்லி," சே , என்ன இது கூட தெரியாதா, நான் சொல்லுறேன் பாரு " அப்பிட்டின்னு  நம்மள டெம்ப்ட் பன்னி போன் பண்ண வைக்க பாக்குறாங்க. நெஜமாலுமே டிவி பாக்கிறவங்க  ரொம்ப முட்டாள்கள்னு நினைச்சா மட்டுமே இப்படி எல்லாம் நிகழ்ச்சி காட்ட முடியும். ராஜ் டிவிக்கு  ஒரு பெரிய கும்பிடு.....!( தப்பு என் மேல தான் அதையும் உக்காந்து பார்த்தேன் பாரு...அது அந்த நிகழ்ச்சியோட வெற்றி )
Blogger Widgets