Pages

Wednesday, November 9, 2011

கூடங்குளம் அணு உலை…!


நொம்ப நாளா டப்பாவை தொடவே இல்லை . ( நான் ஆணி புடுங்கிற கம்பேனில, வெப் பேஜ் தயாரிப்பு விசயமா கொஞ்சம் பிஸி ஆய்ட்டேன் ...) .நண்பன் கிட்ட இருந்து ஒரு குறுஞ்செய்தி , "டேய் உன் ப்ளாகை யாரோ சைட் போட்டு வித்துட்டாங்க " , அதான் அவசர அவசரமா இதை டைப் பண்ணிட்டு இருக்கேன் . சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு பதிப்ப போடலாம்னு ...

கூடக்குளம் அணு உலை பிரச்சனை வர வர பெரிதாகி கொண்டே வருகிறது . ஜப்பானின் புகுஷிமோ அணு உலை விபத்துக்கு பிறகு மக்களின் பயம் இன்னும் கூடி இருக்கிறது. பத்தாத குறைக்கு அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள் , இன்னும் சில தொண்டு இயக்கங்கள் இவர்களின் அன்றாட அறிக்கைகள் என மக்களை போட்டு குழப்பி கொண்டு உள்ளார்கள்.

நிறைய பேருக்கு , அணு உலை எப்படி இயங்குகிறது? , அதன் முதன்மையான எரி பொருள் என்ன?, எவ்வளவு தேவைப்படும்? , எவ்வளவு மின்சாரம் கிட்டும்?, கழிவு என்ன ?, எவ்வளவு கதிரியக்கம் வெளிப்படும்? போன்ற விவரங்கள் எதுவும் தெரியாமல் பத்தோடு பதின்னொன்றாக எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள்.

அணு உலையில் இருந்து மின்சாரம் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு விசயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மாற்று வழியில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறேன் என்பதெல்லாம் தற்போது நடவாத காரியம். காற்றில் இருந்து மின்சாரம், கடல் அலையில் இருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் என்பதெல்லாம் கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும். ஆனால் இதை எல்லாம் நிறுவுவதற்கு ஆகும் செலவு , பராமரிப்பு செலவு, மிக மிக அதிகம். நமது ஒரு பக்கத்து கிட்னிய வித்தா தான் ஒரு யூனிட் மின்சாரம் வாங்க முடியும்.

PHOTO BY: A. Shaikmohideen  நன்றி: THE HINDU
 
அணு உலை நிறுவுவதாலேயே ஆபத்து என்றல்லாம் பைத்தியகாரதனமாய் நினைக்க கூடாது. அப்படி பார்த்தால் பாலம் கட்டுவது கூட நொம்ப ஆபத்தானது தான். எப்ப வேணாலும் இடிந்து விழலாம் . என்ன கேரண்டி ...? ரயிலில் பயணம் செல்லவது கூட பாதுகாப்பானது கிடையாது. எப்போது வேணும் என்றாலும் தடம் புரளலாம் . விமான பயணம் கேக்கவே வேணாம் ,எப்போ வேணாலும் யார் வேணுமானாலும் கடத்தி கொண்டு போய் ஏதாவது அடுக்கு மாடி கட்டிடத்தில் மோத விடலாம்.

பாலம் , ரயில் , விமானம், பஸ், பைக் , இத்யாதி இத்யாதி எல்லாம் Necessary Evil என்று நமது வாழ்க்கைக்கு தேவையான அல்லது அத்தியாவசமான கேடு என்று வகைப் படுத்தலாம். இவைகள் இல்லாமலும் வாழ முடியும் . ஆனால் எவ்வளவு பேர் முன் வருவார்கள் என்பது தான் கேள்வி. ? இவைகளில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் எத்தனை, எத்தகையது , அவற்றில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொண்டும் ,இதனுடைய முழு பயனையும் அடைவது எப்படி என்பதில் தான் இருக்கிறது நம்முடைய சாமார்த்தியம். ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய மிதி வண்டியில் பிரேக் என்பதே கிடையாது. பிரேக் இல்லாத வண்டியை ஒட்டி, நிறைய வாங்கி கட்டி கொண்ட ஒரு ஆசாமி பிரேக்கை வைத்தான். இதில் ஆபத்து விகிதம் கொஞ்சம் தான் , ஆனால் அணு உலையில் மிக அதிகம்.

 
அமெரிக்காவின் திரி மைல் , ரசியாவின் செர்நோபிள் அணு உலைகள் போன்றது கிடையாது கூடங்குளத்தில் அமைந்திருக்கும் அணு உலை. அது மிகவும் பாது காப்பானது. யார் இந்த உத்திரவாதத்தை தருவது, ? தரத்தை யார் மதிப்பிடுவது ? என்னென்ன பாது காப்பு உள்ளது ? அணு உலை எப்படி இயங்குகிறது போன்றவைகளை என்னுடைய அடுத்தடுத்த பதிப்புகளில் போடுகிறேன்...!

ஆணி புடுங்கிற வேலை கொஞ்சம் இருக்கு , முடிச்சுட்டு வந்துருறேன். ஓகேயா...! 

அதுவரை வவ்வால் பார்வையின்
கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை பதிவை படித்து பாருங்கள் ...!

2 comments:

  1. நல்ல இருக்கு

    நன்றி,
    ஜோசப்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. @ ஜோசப் : மிக்க நன்றி . தமிழ் காமெடி உலகம் உங்கள் வலை தளமா ...?

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets