Pages

Tuesday, May 31, 2011

ஆணி புடுங்கிற வேலை

கொஞ்சம் ஆணி புடுங்கிற வேலை அதிகம் ஆய்டுச்சு ...! மன்னிக்கவும் . ஜூன் 10 க்கு அப்புறம் தான் , டப்பாவ தொட முடியும்னு நினைக்குறேன்,.
"நெறைய மேட்டர் இருந்தும் ஒன்னும் செய்ய முடியலியே ...! என்ன பண்ணுவேன் ...! ஹோ ..ஹோ..ஹோ.."
(கடைசி வரிய நடிகர் திலகம் சிவாஜி  மாதிரி வாசிக்கணும்... )( சே ஒரு தத்துவம் கூட போடா முடியாம போய்டுச்சே ...!)

Sunday, May 8, 2011

குறுஞ்செய்திகள்

கழுகுக்கும்  மனிதனுக்கும்  என்ன  ஒற்றுமை ?
ரெண்டுமே  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிச்ச  படம் . 
------------------- 
எப்பொழுதும்  விருது  வாங்கும்  ஊர்  எது ?
விருது நகர் . 
-------------------
எந்த  கடைக்கு  மூக்கு  மேல  கை  வச்சுக்கிட்டு  போகணும் ?
சாக்கடை 
-------------------
எந்த  கேக்கை  சாப்பிட  முடியாது ?
Detergent - கேக்
---------------------  
சாப்பிடக்கூடிய  ஆணி   எது ?
பிரியாணி 
---------------------
கை  உள்ள  மரம்  எது ?
முருங்  "கை " மரம் .   
--------------------
எந்த  மான்  கோயிலை  சுத்தி  சுத்தி  வரும் ?
பக்தி -மான் 
-------------------
சாம்பார  கோல்ட்  ஆக்கணும்ன என்ன  பண்ணனும் ?
. 56 கேரட்ட  உள்ள  போடணும் 
-------------------- 
டென்ஷன்  அதிகம்  ஆனா  என்ன  ஆகும் ?
"Eleven" ஷன்  ஆகும் .  
--------------------
ஹெட் மாஸ்டர்  ஏன்  ப்ளம்பர  வர  சொல்லுறாரு ?
  கொஸ்டீன் பேப்பர்  லீக்  ஆய்ர்ச்சாம் ! 
-----------------------
Man1( கோபத்துடன் ): அந்த டாக்டர் என்ன பார்த்து "எப்படி இருங்கீங்க " என்று கேட்டார் .
Man2: சரியாதானே கேட்டார் . ஏன் இப்படி கொவபடுறிங்க...?
Man1: அத ஆச்சிரியத்துடன் இல்ல கேட்டார் . 
-------------------
Postman: உங்களுக்கு  ஒரு  மொட்டை  கடிதாசி  வந்து  இருக்கு .
Man: எங்க  இருந்து ?
Postman: பழனில இருந்து .
--------------------
Man1: கையில்  கட்டையோட எப்பொழுதும்  அலைகிறாரே , அவர்  யாரு ?
Man2: அவர்  கட்ட  பிரமச்சாரியாம் .
--------------------
Man1: ஏன் எல்லாரும்  ஓடுறாங்க ?
Man2: இது ரன்னிங் ரேஸ்ல ஜெயிகிரவங்களுக்கு  கப்  தருவாங்க ..!
Man1: ஹா , ஹா , ஹா ஜெயிகிரவன்   கப்  வாங்குறதுக்கு  மற்றவர்கள் ஏன்  ஓடுறாங்க ?  
-----------------
Boy1: டேய்   நாளைக்கு  நான் சினிமாக்கு  போறேன்  வரியா  டா...?
Boy2: முடிஞ்சா  வரேன்  டா 
Boy1: முடிஞ்ச பிறகு  ஏன்டா  வர ? படம்  ஆரம்பிக்கும்  போது வாடா. 
----------------------


திரை விமர்சனம்- எங்கேயும் காதல்

வேற வேல பொழப்பே இல்லாமல் சும்மா படம்மா பார்த்து தள்ளுகிறேன். நேத்து இரண்டாம் ஆட்டம் " எங்கேயும் காதல் " போய் இருந்தோம். பார்த்த தியேட்டர் ஒரு கொடுமைனா, படம் அதை விட செம கொடுமை. இதுல விமர்சனம்னு ஒன்னு போட்டா அதை விட ஒரு கொடுமை வேற ஏதும் இல்லை. 

படத்தில் கிளைமாக்சில் ஒரு புறா ஜெயம் ரவியீன் காதல் கடிதத்தை தனது கால்களில் எடுத்து கொண்டு , ஹீரோயீன் இடம் கொண்டு சேர்க்கிறது. பின்னர் இருவரும் ஒன்று சேர்கிறார்களாம். கருமம்ட சாமி. பிரபு தேவா மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்கார். நாம எல்லாம் சுத்த மட சாம்பிராணிகள் , என்னத்த காட்டினாலும் பார்ப்போம் என்று நினச்சுட்டு இருக்கார் போல. ஜெயம் ரவி இப்படி இன்னும் ஒரு படம் நடித்தால் போதும் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் இருந்தே காணமல் பொய் விடுவார். 

ஹன்சிகா மோத்வாணி வழக்கம் போல பணக்கார அப்பாவின் லூசு பொண்ணாக வருகிறார். . வழக்கமா ஹீரோக்கு தான் ஹீரோயீன பார்த்த வுடன் காதல் பத்திக்கும் ஆனா இதுல ஹன்சிகவுக்கு ஜெயம் ரவியை பார்த்தவுடன் காதல் பத்திக்கிச்சு.ஆனா ரவிக்கு ஹன்சிகா மேல் எதற்கு காதல் ஏற்ப்பட்டது என்பதற்கு எந்த சீனும் இல்லை. 

படம் முழுக்க ஜெயம்  ரவி , மோத்வாணி, சுமன் , ராசு சுந்தரம் , இவர்கள் தான் வருகிறார்கள். அப்புறம் ஆ ..வூ னா பாட்ட போட்டு விடுகிறார்கள் . பிரபு தேவாவுக்கு எதுக்கு பாட்டு என்று தெரியவில்லை . அதுவும் பேர் போட்ட உடனே பாடிவிட்டு போகிறார். இடை வேளைக்கு அப்புறம் உடனே பாட்டு . இடை வேளைக்கு அப்புறம் பாட்டு போட்டால் யாரும் எழுந்திருத்து போக மாட்டார்கள் என்ற தகிரியம்.

படம் பாரிசில் எடுத்து இருகிறார்கள். இது வரை சினிமாவில் பார்க்காத லொகேஷனை பார்க்கலாம். படத்தில் ராசு சுந்தரம் செய்யும் காமெடி  மட்டும் தான் ஒரே ஆறுதல் . அது கூட Mr . Bean னோட   இந்தியன்  வெர்சன் . இந்த வருஷத்தின் மிக கொடுமையான படம் என்ற தகுதி இதற்க்கு உண்டு. இதை யாரும் மிஞ்ச மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கேயும் காதல் இருக்குனு எங்களுக்கும் தெரியும்டா வென்று... ! 


Tuesday, May 3, 2011

திரை விமர்சனம்- "கோ" & " வானம் "

விடுமுறைல வந்து சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படியே ரெண்டு படமும் பார்த்து விட்டேன். ( கோ , வானம் ) . இங்க இப்போ நல்ல மழை. அதனால் வெயில் அவ்வளவாக  தெரிய வில்லை.

" கோ " படத்தை கோயம்பத்தூரில் பார்த்தேன். நன்றாக இருந்தது. அங்கெங்கே கொஞ்சம் லாஜிக் உதைத்தாலும் ஒரு பத்திரிக்கை நிருபர் , போட்டோ கிராபர் , எப்படி எல்லாம் ஒரு ஆட்சியை மாற்ற முடியும் என்பதை வித்தியாசமாக காட்டி உள்ளார்கள். ஜீவா ஒரு போட்டோ கிராபர்ராக நன்றாக பொருந்துகிறார். பாம்ப் வெடித்த போதும் கூட ஓடி ஓடி புகை படம் எடுத்து ஒரு போட்டோ கிராபர்ரின் கடமையை நிலை நாட்டுகிறார். " பாம்ப் தான் வெடித்து விட்டதே போய் அடி பட்டவர்களுக்கு உதவி செய்யல்லாம் இல்ல அத விட்டுட்டு படம் எடுத்துட்டு இருக்கான் பரதேசி "னு தங்கமணி சொன்னார். ஒரு போட்டோ கிராபராக அவர் அதை தான் செய்யனும், அதை தான் இயக்குனர் நன்றாக காட்டி உள்ளார் என்றேன். வரலாற்றை சொல்ல  ஒரு புகை படம் போதும் , (புலிச்சர் விருது பெற்ற வியட்நாம் Kim Phuc - நிர்வாண சிறுமி ஒரு உதாரணம் . வியட்நாமின் போர் அவலங்களை அது உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ..இப்படி நிறைய உதாரணங்களை சொல்லலாம் ). 


பாடல்கள் கேட்ட்கும் விதமாக உள்ளது . " என்னமோ ஏதோ " " அமிலி துமிழி நெளியும்"  இரண்டு பாடல்களும் அருமை. இன்னும்  கொஞ்ச நாட்களுக்கு இளைஞ்சர்களுக்கு இது தாம் செல் போனின் ரிங் டோன்னாக இருக்கும். பாடல்கள் எடுத்த இடங்களில் இயக்குனர் மிகவும் மெனக் கெட்டு இருப்பது தெரிய வருகிறது.  ராதாவின் மகள்  அடக்கி வாசித்து இருக்கிறார். ஆனால் அவருடைய புருவங்கள் தான் எனக்கு பிடிக்கவில்லை. வில்   போன்ற   புருவம்  என்று சொல்லுவார்கள்  ஆனால் அவருக்கு  நொம்பவுமே வளைந்து   இருக்கிறது. பியா நல்ல வாயாடி பெண்ணாக வந்து இடையில் அநியாமாக செத்து போகிறார். நல்ல படம். இயக்குனர் ஏன் கோ என்று பெயர் வைத்தார் என்று தான் தெரிய வில்லை. இதற்க்கு முன்னரும் அயன் என்று வைத்தார். படத்துக்கும் அயன்னுக்கும் என்ன தொடர்பு என்று இன்று வரை எனக்கு புரிய வில்லை. அதே மாதிரி  தான் " கோ" வும்.

======================================

வானம் படம் ஈரோட்டில் பார்த்தேன் . ஏண்டா பார்த்தேன் என்று நொந்து நூலாகி போனேன். படம் பார்த்து கொண்டு இருக்கும் போது 5 முறை பவர் கட். வாழ்க மின் வெட்டு. பாடல்கள் ஒன்று கூட புரியவில்லை. காதில் சத்தம் கேட்டு செவிடாகி போனது தான் மிச்சம். படத்தில்  அநியாயத்திற்கு க்ளோஸ் அப்  காட்சி வருகிறது . அதுவும் சோனியா அகர்வாலின் முகம் " உவ்வ்வே " ரகம். அதே மாதிரி பிரகாஷ்  ராஜ்   முகமும் .கன்னக் கொழுப்பு மினு மினுக்கிறது. கன்றாவி. சிம்பு முன்னை விட கொஞ்சம் உடம்பு போட்டு இருக்கிறார். சந்தானம் காமெடி நம்மை கொஞ்சமாக சிரிக்க வைக்க நொம்ப சிரம படுகிறார்.  வேற வழி இல்லை சிம்புவிற்கு. சேம் ஏஜ் காமடியனுக்கு அவரு பாவம் எங்க தான் போவார். வடிவேல் எலக்சனில் பிஸி ஆகி விட்டார். விவேக்கை போட்டு இருக்கலாம்.
படத்தின் இயக்குனர் நிறைய ராஜேஷ் குமார் , பட்டுகோட்டை பிரபாகர் நாவல்கள் எல்லாம் பார்ப்பார் போல இருக்கு. ஏன் என்றால் படத்தின் காட்சிகள்  எல்லாம் பிட்டு பிட்டாக வருகிறது.அவர்கள் நாவலில் தான் அத்தியாயம் 1 : இடம் : தூத்துக்குடி , அத்தியாயம் 2 : இடம் : சென்னை என வந்து எல்லாம் 9  தாவது அத்தியாயத்தில் ஒன்று சேரும் . அதே போல் இதிலும் இடை வேலைக்கு அப்புறம் எல்லாம் ஒன்று சேர்கிறது. அது கூட நாம் யூகிக்கும் வகையாக இருக்கிறது. புதுசாக வித்தியாசமாக செய்கிறாராம் . நமக்கு தலை கிறுகிறுத்தது தான் மிச்சம் . அட வித்தியாசமாக செய்யட்டும், அதுக்காக ஒவ்வொரு மூன்று நிமிசத்துக்கு ஒரு தடவை காட்சி மாறுவது கொடுமை. பிரகாஷ் ராஜின் பிளாஷ் பேக், பிளாஷ்பேக் தான என தடுமாற வைக்கிறது . ஒரு கொசு வர்த்தி சுருளை கட்டி இருக்கலாம் .
பரத் - எதோ ஒரு மூன்றாம் வகை ஹீரோ போன்று வந்துட்டு போகிறார். வேண்டாத வேலை. ஒரு முன்னணி ஹீரோ ஆனதுக்கு பிறகு இப்படி மற்ற ஹீரோ வுடன் ஏன் சேர்ந்து நடிக்க வேண்டும் அதுவும் உப்பு சப்பில்லாத ஒரு கதா பாத்திரதிர்க்காக. ஒரு வேலை சிம்புவின் ரசிகர்களை தன பக்கம் கொஞ்சம் ஈர்க்கலாம் என்ற நோக்கமாக இருக்கலாம். 

ஹிந்து ,முஸ்லீம்  ஒற்றுமை எப்படி பார்க்க படுகிறது , அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் ஆபிசர் ஒரு ஹிந்து வெறியராக இருந்ததால் என்ன என்ன விளைவுகள் ஏற்ப்பட்டது , போன்றவற்றை இயக்குனர் நன்றாக சொல்லி இருக்கிறார். அனால் அது மட்டுமே போதாதே ஒரு படம் வெற்றி அடைய. சிம்புவுக்கு ஏற்ற கதை களம் கிடையாது வானம். அதுவும் கேபிள் ராஜா கேரட்டர். வேறு எந்த கேரட்டரும் பொருந்தி இருக்கும். கட்டிடம் கட்டிடமாக தாவுவதர்கன சீன்கள் இருப்பதாலேயே கேபிள் ராஜா என்று பேர் வச்சு இருப்பாங்க போல் இருக்கு. 

கோ படத்தை பார்த்த பிறகு வானம் பார்த்த படியால் வானம் மனதில் ஓட்ட வில்லை. சுத்தமாக பிடிக்க வில்லை. நண்பர் சொன்னார், கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டியதாம். ஹீரோயீனை மாத்து என்று தொல்லை கொடுத்ததினால் , ஜீவாவை போட்டார்கள் என்று. இந்த விசயத்தில் சிம்பு ஜீவாவுக்கு உதவி செய்து உள்ளார். ஜீவாவின் நிலை உயர்ந்து உள்ளது. சிம்பு  கோ வில் நடித்து இருந்தால் அது அவரை மேலும் உயர்த்தி இருக்கும். கடைசியில் இறந்து போவது மாதிரி வந்தால் , ஒரு சிம்பத்தி அலை அடித்து படம் ஓடி ... நல்ல வசூலை தந்து ...மார்கெட் உயர்ந்து ....இப்படி எல்ல்லாம் சிம்பு நினது இருந்தால் , தப்பு கணக்கு போட்டுட்டார்.   
Blogger Widgets