Pages

Saturday, September 18, 2010

Germany Bakery blast

"ஹிமாயத் மிர்சா பயக்"
(Himayat Mirza Baig) யார் இந்த புண்ணியவான்னு  தெரியுமா ...? இங்க புனேல , சும்மா டீ சாபிட்டுட்டு, பேசிட்டு இருந்த 17 பேர போன போகுதுன்னு பாம் வச்சு கொன்ன அண்ணன் தான் அவர் ... இது கடந்த FEB மாதம் நடந்தது . அந்த கடையீன் பெயர் 'ஜேர்மன் பாகிரி ". (நான் கூட ஒரு கேக் அங்க சாப்பிட்டு இருக்கேன் .)  அண்ணாத்தே பாம் வைக்க என்ன காரணம்  தெரியுமா ,புனே போலீஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொஞ்ச பேர கைது பண்ணினார்கள். அண்ணனுக்கு பாசம் பொத்துகுட்டு  வந்துருச்சு. பலி வாங்க பாம் வச்சுட்டாரு. எதோ புண்ணியம் இந்தியன் போலீஸ் கஷ்ட்டப்பட்டு (???) கைது பன்னி இருக்காங்க.

இப்போ அவர் இந்திய ஜனநாயக நாட்டுல இருகார்  இல்லையா.., எனவே  ஒரு வக்கீல்  அண்ணனுக்கு ஆஜர் அகனுமாம். Pune Bar Association  ல ( தண்ணி அடிக்கிற பார் இல்லைங்க , இவங்க வக்கீல் ஜாதி...)இருந்து சுஷில் மஞ்சர்கர் (Sushil மஞ்சர்கர்) னு ஒரு சமுக ஆர்வலர் அண்ணனுக்கு ஆஜர் ஆக முடிவு பன்னி இருகார். 
" ஹிமாயத் மிர்சா , குற்றவளியா இல்லையானு கோர்ட் தான் முடிவு பண்ணனும்,அது வரை குற்றம் சார்தப்பட்டவருக்கு  எல்லா உரிமையும் உள்ளது..." னு டயலாக்  வேற விட்டு இருகார்.

சரி, நமது நட்டு நீதி மன்றங்கள் ரொம்ப நல்லு முறையாக செயல் பட்டு வந்தால், இதை நம் ஒத்துகொள்ளலாம். இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடக்கும் போது எத்தனை முறை வாய்தா  வாங்க போகுதோ...? தப்பி தவறி எதாவது தீர்ப்பு வந்தால் கூட மேல் கோர்ட், கீழ் கோர்ட் ,சைடு கோர்ட் ,  ஹை கோர்ட்,சுப்ரீம்கோர்ட் னு  மாறி மாறி வழக்கு இழுத்து அடிச்ட்டே இருக்கும். அது வரை மிர்சா அண்ணன் ஜெயில்ல ஜாலியா சிக்கனோட விருந்து சாப்பிட்டு இருப்பர். அப்படியே சுப்ரீம்  கோர்ட் நீதி வழங்கினாலும் ( 12 வருஷம்  கழிச்சுதான்....! ) இருக்கவே இருக்கு ஜனாதிபதி கருணை மனு...ஒரு தடவை மனு போட்டுட்டு ,நம்ம ஜாலியா இருந்தரலாம். அப்புறம் ஜனாதிபதி மண்டைய  போட்டு குழப்பிட்டு இருப்பார். முடிவு எடுக்க ரொம்ப சிரம படுவர். அது போக அவருடைய கால தாமதத்திற்கு யாரும் கேள்வி வேற கேட்க  முடியாது ( என்ன கொடும சார் இது...? ) ஒரு வருசமோ இல்லை 10 வருசமோ ..எப்ப தோணுதோ அப்போ அவர் முடிவு எடுக்கலாம். கருணை மனுவை நிரகரிசுட்டா  அப்புறம் ஜனாதிபதிக்கு பேர் கெட்டு போய்டுமே...

17 பேரை பாம் வைத்து கொன்ன ஒரு மனித விலங்கிற்கு இவ்ளோ முக்கியத்துவம் தேவை தான என்பது தான் என் கேள்வி. இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு எந்த வக்கீலும் ஆஜர் ஆக கூடாது.குற்ரம் சாட்டப்பட்டவரே வழக்காட முடியும் என்ற பிரிவு இருக்கும் போது,எதுக்கு வக்கீல் தேவை.மேலும் இது போன்ற குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதுவும் மிக விரைவாக. இந்த தண்டனை மற்றவர்களுக்கு  ஒரு பாடமாக அமைய வேண்டும். குற்றம் புரிந்தால் யாரும் நமக்கு வக்கீல் வர மாட்டர்கள், தண்டனை கடுமையாக இர்ருக்கும், கருணை மனு இல்லை...என்ற சூலில் தான் குற்றம் புரிய தயங்குவார்கள்.

சுஷில் மஞ்சர்கர் .இவர் மிர்சாவிற்கு ஆஜர் ஆவது ஒன்னுனும் மனிதாபிமான அடிப்படையில் அல்ல என்பது என் கருத்து. இதற்க்கு பின்னல் பணம் விளையாடி இருக்கும் என்பதில் யாருகாவது சந்தேகம் இருக்கா ...? அந்த 17 பேரின் சொந்த பந்தங்கள் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கும். அந்த 17 பேரின் உயிர் இலப்பு திரும்ப வர கூடியதா என்ன. வழக்கு முடியும் வரை  மிர்சா " இன்னொசென்ட்" ஆம் . மண்ணாங்கட்டி . சுத்த பேத்தல். பேசாம இந்த போலீஸ் கைது பண்ணுறதுக்கு பதில் என்க்கௌன்ட்டர்ல போட்டு தள்ளி இருக்கலாம். 

இந்த பாம் வெடிக்கும் போது சுஷில் மஞ்சர்கர்ரோட  பையனோ, இல்லை பெண்ணோ  அங்க இல்லாம போனது சுஷில் மஞ்சர்கர் செய்த புண்ணியம் or அவர் மனைவி செய்த புண்ணியம். மஞ்சர்கர் வக்கீலுக்கு ஒரு விஷயம் புரியல..."எல்லாமே தமாஸ் தான்....தனக்கு நடக்காத வரை...". அவருக்கு எந்த விசயம்மும் நடக்கல இல்லையா அது தான் அவருக்கு தமாசா இருக்கு.... நல்ல இருயா வக்கீல் நல்ல இரு ....!

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets