புகுஷிமோவில் அணு உலை வெடித்ததா...? கதிரீயக்கம் வெளியேறியதா ...? புகுஷிமோவில் உண்மையில் ... நடந்தது என்ன....? இப்படி முடி இல்லாத சொட்ட மண்டைய நொம்ப நாளா தேச்சுட்டே இருந்தேன். IAEC மற்றும் ஜப்பானின் புகுஷிமோ அணு உலை வலை தளம் , இன்னும் பல வலை தளங்களை பார்க்கும் போது சில விஷயம் புரிஞ்சது .அதை தொகுத்து உள்ளேன்.முழு விவரம் படிக்க இந்த விக்கிபீடியாவை சொடுக்கவும் .
- நில நடுக்கம் ஏற்படும் போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் வகையில் தான் அமைக்கப்பட்டு இருக்கும். புகுஷிமோவிலும் நில நடுக்கம் ஏற்பட்ட போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது .
- நில நடுக்கம் ஏற்பட்ட சில நொடிகளில் "கண்ட்ரோல் ராடுகள்" சொருகப்பட்டு அணு உலை "சங்கிலி தொடர் வினை" உடனடியாக நிறுத்தப்பட்டது.
- செயின் ரியாக்சன் நின்றாலும் ," டீகே ஹீட் " வந்து கொண்டு தான் இருக்கும். இந்த டீகே ஹீட் ரொம்ப முக்கியமானது. உதாரணமாக ஒரு அணு உலை 3000 MW மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்றால் 210 MW மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு இருக்கும் இந்த டீகே ஹீட் . (சுமார் 7 % ). இந்த வெப்பமானது அணு உலை நிறுத்திய முதல் நாளில் 30 MW மின் உற்பத்தி செய்யும் (சுமார் 1 % )அளவுக்கு குறைந்து விடும். டீகே ஹீட் முழுவதும் குறைய நிறைய நாட்க்கள் பிடிக்கும்.இந்த வெப்பத்தை தணிக்க வேண்டும் . இல்லை என்றால் அணு உலை நடுப்பாகம் உருகி விடும் அபாயம் உள்ளது.
- அணு உலை செயல் பாட்டை நிறுத்திக் கொண்டதால் அங்கு மின்சாரம் கிடையாது . எனவே டீசல் ஜெனரேட்டரை கொண்டு அணு உலை வெப்பம் தணிக்க நடவடிக்கை ஏற்பட்டது. இது வழக்கமாக இல்லை என்றாலும் ,இந்த மாதிரி பேரிடர் நேரங்களில் செய்யப்படும் முறைகளில் ஒன்று தான் .
- துருதிஷ்டமாக நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி அலை வந்து அந்த டீசல் ஜெனரேட்டர்களின் செயல் பாட்டை முடக்கியது .
- உடனடியாக அணு உலை பேக் அப் பேட்டரிகளின் உதவியுடன் குளிர்விக்க பட்டது. இது எல்லாம் தானியங்கி முறையில் நடந்தது . இந்த பேட்டரிகளின் மூலம் சுமார் 8 மணி நேரத்திர்க்கு அணு உலையை குளிர்விக்க முடியும். புகுஷிமோவில் 8 மணி நேரம் பேட்டரியால் பேக் அப் செய்யப்பட்டது.