Pages

Tuesday, January 31, 2012

அண்ணா ஹாசரேயும் வொய் திஸ் கொலவெறியும் - ஒரு ஒப்பீடு

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பது உண்டு. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்ற நிகழ்வுகளை வேறுபடுத்தி காட்ட இப்படி சொல்வது வழக்கம் . ஆனால் எந்த ஒரு நிகழ்வுகளையும்வேறு எந்த ஒரு நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்த முடியும்.  அப்துல் காதர் அமாவாசை அன்று பிறந்து இருக்கலாம். !

ஒரு வண்ணத்து பூச்சியின் இறகு அசைவில் உலகின் மறு கோடியில் உருவாகும் ஒரு புயல் காற்றினை தொடர்பு படுத்தலாம் . எங்கோ அசைந்த ஒரு வண்ணத்து பூச்சியின் சிறகு அசைவு தான் இந்த தானே புயலும் . கேயாஸ் தியரி படி இது சாத்தியமே .

வொய்  திஸ் கொலவெறியும், அண்ணா ஹாசரேயும்  ஒன்றால் விளைந்த மற்றொரு நிகழ்வு அல்ல என்றாலும் இரண்டுக்கும் ஒரு பொதுவான ஒப்பீடு உள்ளது . அது என்னான்னு இங்க பார்க்கலாம் .

1. இருவருமே மிக குறைந்த காலத்தில் மிக பிரபலாமாக பேசப்பட்டவர்கள் . இரண்டுமே திடீரென்று தோன்றியவர்கள் . ஒபாமா வரை அண்ணா ஹசாரே பிரபலம் . எகிப்தில் ஒரு சாதாரண பப் பாரில் வொய் திஸ் கொலவெறி பாடப்படுகிறது. இன்றைய அளவில் ஜன் லோக் பால் தான் டாக் ஆப் தி இந்தியா . கொலவெறி பாடலும் இது வரை 21 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இதன் மராத்தி வெர்சனை கேட்டு உள்ளேன். பாகிஸ்தானிலும் " டொமாக்கராசி ஜி " னு ரீமேக் செய்து உள்ளார்கள் .

2. ஹசாரே இந்திய அரசியல் அமைப்பு , அதன் செயல்பாடுகள் , மத்திய ,மாநில, பொது பட்டியல் விவகாரங்கள் , இதை பாதிக்கும் அம்சங்கள் என நிறைய விஷயங்களை அறியாதவர்.   கிரண் பேடி கும்பலால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை தான்அண்ணா ஹசாரே. மக்கள் ஊழலில் நொந்து போய்  இருக்கும் நேரத்தில் அதற்க்கு எதிராக குரல் கொடுத்ததால், மீடியாக்கள் ரொம்ப அதிகமாய் முக்கியத்துவம் கொடுத்ததினால் பிரபலம் ஆனவர் . ஊழலுக்கு எதிரான ஒரு சட்டம் அது ஜன் லோக் பால் . இப்படி பட்ட எளிமையான ஒரு எண்ணாதினால் தான் ஜன் லோக் பால் மக்களிடையே பிரபலம் ஆக காரணம் . இதன் ஆதாரண கட்டமைப்பு ,செயல்பாடுகள் பற்றி ஒருவருக்கும் தெரியாது அல்லது தெரிந்து கொள்ள விரும்பவும் வில்லை. 

3. கொலவெறி பாடலின் பிரபலமும் இப்படி பட்ட ஒரு காரணம் தான். இதை விட மிக மிக அழகான மெட்டுக்களுடன் , இசைக் கோர்வைகளுடனும் கொண்ட எண்ணற்ற பாடல்கள் இருந்தாலும் இவ்வளவு பிரபலம் ஆக காரணம் அதன் எளிமை . ஒரு பாடலுக்கே உண்டான எந்த விதமான இலக்கண கட்டுபாட்டுக்குள்ளும்  அடங்காமல் ஏதோ பேசுவது போல அமைக்கப்பட்ட அதன் நடையமைப்பு . மானே ,தேனே , மன்மதனே என்று ஜல்லி அடிக்காமல் மிக சாதாரணமான வார்த்தைகளை கொண்டதும் அதன் பிரபலத்திக்கு ஒரு காரணம் .சும்மா இருக்கும் நேரத்தில் முணுமுணுக்க , ராகம் தாளம் என்று இலக்கண கட்டு படுத்தாத ஒரு சாதாரண பாட்டு  இல்லாத நேரத்தில் கொலவெறி அதை பூர்த்தி செய்தது .


அதுவும் இல்லாமல் , YOU TUBE , மூஞ்சி புத்தகம் (FACE BOOK ) போன்ற ஒரு சோசியல் வலைத்தளங்களில் இதன் பரவல் அசாதியமானது தான். ஒரு CD யின் மூலமோ அல்லது டி‌வியின் மூலமோ இப்பாடல் பிரபலம் ஆகுமா என்றால் சந்தேகமே . YOU TUBE , மூஞ்சி புத்தகம் போன்ற சோசியல் வலை தளங்களில் மிக சாதாரணமான விஷயம் உலகம் முழுவதும் பரவ முடியும் .அந்த வலைதளங்கள் செயல்படும் விதம் அப்படி.

வரலாற்றில் இப்படி திடீரென்று பிரபலம் ஆனவைகள் நாளடைவில் காணாமல் போன கதைகள் ஏராளம் . அண்ணா ஹாசரேயும் , கொலவெறியும் அந்த  லிஸ்டில் கண்டிப்பாக சேரும்.









No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets