Pages

Tuesday, January 31, 2012

ஸ்ஸூகூல்...!

கடந்த ஒரு மாதமாக டப்பாவ தொடவே முடியாம போய்ருச்சு . அதனால நொம்ப லேட்டா சொல்லுறேன் " அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" . அது என்னனா , தங்கமணிக்கு லீவ் (ஒரு வருஷம்) முடிஞ்சு போச்சு. ஜனவரி ரெண்டாம் தேதியில் இருந்து ஆபீஸ் போறாங்க. ஒரு மாசமா தமிழ் நாட்டுல லீவ என்சாய் பண்ணுணதுல கட பக்கம் வர முடியல . அதனால ப்ளாகர் உலகம்  ஒண்ணும் குடி முழுகி போகாதுன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் ஒரு பில்ட் அப் வேணாமா ?
ஹரீஷ்
ஹரீஷ் 
டிசம்பர் மாசம் முழுசா சசிகலா , தானே புயல் , கொல வெறி,முல்லை பெரியாறு ..! இது தான் ஹாட் ஆப் த டாபிக் . ஒரு சில பத்திரிகைகள் தான் இதை தவிர்த்து மற்ற விசயங்களையும் போட்டாங்க.
சிங்கத்தோட( எ(ங்களோட)ன்னோட)  குட்டிய( பையன்) கொண்டு போய் ஸ்ஸூகூல்ல போட்டாச்சு . மொத நாள் நான் கூட இருந்தகாட்டி அழுகாம இருந்துட்டான் . ரெண்டாம் நாள் கத்தி ஆற்பாட்டம் பண்ணி ஒரே ரகளை ஆகி போச்சு . வேற வழி இல்லாம விட்டுட்டு வரும் போது ஜன்னல் கம்பியை பிடிச்சுட்டு ரோட்டுல போற யாரையோ பாத்துட்டு 'அப்பா வாப்பா ..வாப்பானு' கூப்பிடும் போது இந்த சிங்கதுக்கே கண்ணுல தண்ணி வந்துருச்சு . தங்கமணி நைஸ்ஸா 'நீங்களே கொண்டு போய் விட்டுடுங்கனு' எஸ்கேப். மூணாவது நாள் சேரை கிரில் கதவுக்கு பக்கத்தில் போட்டு உக்காந்துட்டு அழுகை. ஒரு வாரம் ஆச்சு அழுகையை நிறுத்த. இப்ப கூட அப்பப்போ அழுகிறானாம்.  
அந்த ஸ்ஸூகூல்ல ஒன்றரை வயசு முதல் குழந்தைகள் உள்ளார்கள்.  இவன் ஏன் இப்படி கத்தி ஆற்பாட்டம் பண்ணுறான் என்று அவர்களுக்கு எல்லாம் ஆச்சரியம் . ஒரு பெண் குழந்தை 'அங்கிள் ,எனக்கு நெத்தி சுட்டியே இல்லை ..! அம்மாவ வாங்கி தர சொல்லுங்க ' என்றது. இன்னொரு குழந்தை இவன் முன்னாள் நாட்டியம் ஆடி சிரிக்க வைக்க முயன்றது . மற்றொன்று ஒரு பந்தை கொண்டு வந்து தந்தது . ஒரு வினாடி அழுகையை நிப்பாட்டி, பந்தை கையில் வாங்கி வைத்து கொண்டு மீண்டும் அழுக ஆரம்பித்தான், மற்றொரு குழந்தை விளையாடி கொண்டு இருந்த கார் பொம்மையும் வேண்டும்மென்று . அந்த குழந்தைகளும் ஆரம்பதில் இவனை போல் தான்  அழுதார்களாம்.
ஒரு வார காலம் அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தோம் . தினமும் காலையில் ஸ்ஸூகூல் போகிறேன் என்று அவன் அனுபவிக்கும் துன்பத்தை இப்படி ஈடு செய்வோம் என்று ஒரு விதமான மன ஆறுதல். இருந்தாலும் கையுக்கும் காலுக்கும் நடுவே ஓடி ஆடி கொண்டு கூடவே இருந்த குழந்தை திடீரென்று ஆறு மணி நேரம் பிரிந்து போனது ஒரு விதமான வேதனை தான்.
புனேக்கு திரும்பி வரும்போது கேட்டேன் " ஹரீஷ் உன் ஃப்ரெண்ட்டோடா பேர் என்ன ?" "ப்ரீஷ்" என்றான் ( ப்ரீனித்தா ..!). வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets