கடந்த ஒரு வாரமாக ஆணி புடுங்கிற வேலை அதிகம் ஆய்டுச்சு . அதான் பதிவு போட முடியவில்லை ...( ஆமா , உன் பதிவ அப்படியே ஒரு 1000 பேர் டெய்லி படிக்கிற மாதிரி ...போடா ,உனக்கே இது ஓவரா தெரியல ...< அது என்ன மாயமோ ,இல்ல மந்திரமோ தெரியல இப்ப எல்லாம் என்னோட மைன்ட் வாய்ஸ் ( அதாங்க மனசாச்சி )அடிக்கடி பேசுது >.சரி மேட்டர்க்கு வரேன் .
அதாவது விஷயம் என்னன்னா .... எனக்கு ஒரு சந்தேகம் ,நியூ போஸ்ட் டைப் பண்ணும் போது அப்படியே தங்கிலீஷ்ல டைப் பண்ணுவது நொம்ப கஷ்ட்டமா இருக்கு . எல்லோரும் இப்படி தான் லொங்கு லொங்குனு டைப் பண்ணுறீங்களா இல்ல , இதுக்குன்னு ஏதாவது மென் பொருள் உபயோக படுதுறீன்களா ? அப்படி ஏதாவது இருந்தா தயவு கூர்ந்து இந்த ஏழை பதிவலனுக்கு உதவுமாறு உங்களை இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் . sms ல தான் தமிழை அப்படியே ஆங்கிலத்தில் டைப் பன்னி அனுப்புறோம். ப்ளாக்லேயும் அதே முறை தானா ? அதுவும் இல்லாமல் , இந்த "யில் " சில சமயம் வருது சில சமயம் "யேல்" னு வந்து விழுது . சரியான இணைப்பு கிடைக்குறது குள்ளார தாவு தீர்ந்து போகுதுடா சாமி . இப்படி சில சொற்களை , டிராப்டில் சேவ் பன்னி வைத்து இருக்கேன் . வேணும்மா, காப்பி பேஸ்ட் பன்னி தான் பதிவ போடுறேன் .
இதோட விளைவு நான் ஒரு தடவை ஒரு மனு எழுதும் போது வந்தது . பெறுனர்னு தமிழ்ல எழுதுறதுக்கு பதிலா "perunarnu " இங்கிலீஷ்ல எழுதி தொலைச்சுட்டேன்.இப்ப எல்லாம் தமிழ்ல வேகமா எழுதறதை விட இங்கிலிஷ்ல அதே "டமில்லை" வேகமா டைப் பண்ண முடிகிறது . இது எங்க போய் முடியுமோ தெரியல .
ஆனால் இதுல ஒரு சவுரியம் இருக்க தான் செய்கிறது . சில சமயம் எந்த "ல" or எந்த "னா"னு குழம்பிட்டு இருக்கும் போது அதே தன்னப்போல வார்த்தைகளாக வந்து விழும் போது ,அட கம்யுட்டரே சொல்லுது தப்பாக இருக்காதுன்னு விட்டுர்றேன் .முடிஞ்ச அளவுக்கு நான் தமிழ்ல தப்பு இல்லாம எழுதனும்னு முடிவு பன்னி உள்ளேன் .
ஆரம்ப பள்ளி கூட நாட்களில் நான் தமிழை நன்கு படிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம் . அப்போது எல்லாம் இப்போ இருப்பதை போல வீதிக்கு ஒரு பள்ளி கூடம் கிடையாது . அப்பா டிபன்சில் இருந்து வந்து வேலை தேடும் போது நான் என் அம்மா வழி பாட்டி வீட்டில் தான் தங்க நேர்ந்தது . அதுவும் இல்லாமல் அப்பா வழி பாட்டி ,தாத்தா எப்போவே இறந்து போய் இருந்தார்கள் . நான் ஊ .ஒ . ஆ . து . பள்ளியில் மூன்றாம் வகுப்பு சேர்ந்த போது ,எனக்கு அந்த வாத்தியார் ஹிந்தில் தமிழையும் ,கணக்கையும் சொல்லி கொடுத்தார் . உயிர் எழுத்தையும் , மெய் எழுத்தையும் எழுதி மனப்பாடம் பன்னி சேர்த்தறதுகுள்ளார எனக்கு தெரிஞ்சு இருந்த கொஞ்ச நஞ்ச ஹிந்தியும் மறந்து போச்சு . கேலியும் ,கிண்டலின் சிரிப்புகள் இடையே நான் நண்பர்களை உருவாகி கொள்வதற்கு மிகவும் சிரம பட வேண்டியதாக போய்டுச்சு
( நான் : " அம்மா க்யுன் பச்சேன் லோக் ,முஜ்சே பாத் நஹி கர்ரஹா "
அம்மா : அவங்களுக்கு ஹிந்தி தெரியாது இல்ல அதான் , நீ அவங்க கூட தமிழ்ல பேசு அவங்க உனக்கு பிரண்ட் ஆவாங்க ...).
அது போக தமிழ்ல 246 எழுத்து இருக்குனு தெரிய வந்த போது எனக்கு ஜுரமே வந்து ஒரு நாலு நாள் காச்சலில் இருந்தேன் .. அதுவும் இந்த "ஞா" படுத்திய பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல . ஹிந்தியும் , தமிழும் கலந்து " ஞா" வை ஒரு மாதிரி "ஞ்நூ" னு சொல்லுவேன் . வாத்தியார் தலையை பிசுக்குவார் .