Pages

Tuesday, January 31, 2012

அண்ணா ஹாசரேயும் வொய் திஸ் கொலவெறியும் - ஒரு ஒப்பீடு

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பது உண்டு. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்ற நிகழ்வுகளை வேறுபடுத்தி காட்ட இப்படி சொல்வது வழக்கம் . ஆனால் எந்த ஒரு நிகழ்வுகளையும்வேறு எந்த ஒரு நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்த முடியும்.  அப்துல் காதர் அமாவாசை அன்று பிறந்து இருக்கலாம். !

ஒரு வண்ணத்து பூச்சியின் இறகு அசைவில் உலகின் மறு கோடியில் உருவாகும் ஒரு புயல் காற்றினை தொடர்பு படுத்தலாம் . எங்கோ அசைந்த ஒரு வண்ணத்து பூச்சியின் சிறகு அசைவு தான் இந்த தானே புயலும் . கேயாஸ் தியரி படி இது சாத்தியமே .

வொய்  திஸ் கொலவெறியும், அண்ணா ஹாசரேயும்  ஒன்றால் விளைந்த மற்றொரு நிகழ்வு அல்ல என்றாலும் இரண்டுக்கும் ஒரு பொதுவான ஒப்பீடு உள்ளது . அது என்னான்னு இங்க பார்க்கலாம் .

1. இருவருமே மிக குறைந்த காலத்தில் மிக பிரபலாமாக பேசப்பட்டவர்கள் . இரண்டுமே திடீரென்று தோன்றியவர்கள் . ஒபாமா வரை அண்ணா ஹசாரே பிரபலம் . எகிப்தில் ஒரு சாதாரண பப் பாரில் வொய் திஸ் கொலவெறி பாடப்படுகிறது. இன்றைய அளவில் ஜன் லோக் பால் தான் டாக் ஆப் தி இந்தியா . கொலவெறி பாடலும் இது வரை 21 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இதன் மராத்தி வெர்சனை கேட்டு உள்ளேன். பாகிஸ்தானிலும் " டொமாக்கராசி ஜி " னு ரீமேக் செய்து உள்ளார்கள் .

2. ஹசாரே இந்திய அரசியல் அமைப்பு , அதன் செயல்பாடுகள் , மத்திய ,மாநில, பொது பட்டியல் விவகாரங்கள் , இதை பாதிக்கும் அம்சங்கள் என நிறைய விஷயங்களை அறியாதவர்.   கிரண் பேடி கும்பலால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை தான்அண்ணா ஹசாரே. மக்கள் ஊழலில் நொந்து போய்  இருக்கும் நேரத்தில் அதற்க்கு எதிராக குரல் கொடுத்ததால், மீடியாக்கள் ரொம்ப அதிகமாய் முக்கியத்துவம் கொடுத்ததினால் பிரபலம் ஆனவர் . ஊழலுக்கு எதிரான ஒரு சட்டம் அது ஜன் லோக் பால் . இப்படி பட்ட எளிமையான ஒரு எண்ணாதினால் தான் ஜன் லோக் பால் மக்களிடையே பிரபலம் ஆக காரணம் . இதன் ஆதாரண கட்டமைப்பு ,செயல்பாடுகள் பற்றி ஒருவருக்கும் தெரியாது அல்லது தெரிந்து கொள்ள விரும்பவும் வில்லை. 

3. கொலவெறி பாடலின் பிரபலமும் இப்படி பட்ட ஒரு காரணம் தான். இதை விட மிக மிக அழகான மெட்டுக்களுடன் , இசைக் கோர்வைகளுடனும் கொண்ட எண்ணற்ற பாடல்கள் இருந்தாலும் இவ்வளவு பிரபலம் ஆக காரணம் அதன் எளிமை . ஒரு பாடலுக்கே உண்டான எந்த விதமான இலக்கண கட்டுபாட்டுக்குள்ளும்  அடங்காமல் ஏதோ பேசுவது போல அமைக்கப்பட்ட அதன் நடையமைப்பு . மானே ,தேனே , மன்மதனே என்று ஜல்லி அடிக்காமல் மிக சாதாரணமான வார்த்தைகளை கொண்டதும் அதன் பிரபலத்திக்கு ஒரு காரணம் .சும்மா இருக்கும் நேரத்தில் முணுமுணுக்க , ராகம் தாளம் என்று இலக்கண கட்டு படுத்தாத ஒரு சாதாரண பாட்டு  இல்லாத நேரத்தில் கொலவெறி அதை பூர்த்தி செய்தது .


அதுவும் இல்லாமல் , YOU TUBE , மூஞ்சி புத்தகம் (FACE BOOK ) போன்ற ஒரு சோசியல் வலைத்தளங்களில் இதன் பரவல் அசாதியமானது தான். ஒரு CD யின் மூலமோ அல்லது டி‌வியின் மூலமோ இப்பாடல் பிரபலம் ஆகுமா என்றால் சந்தேகமே . YOU TUBE , மூஞ்சி புத்தகம் போன்ற சோசியல் வலை தளங்களில் மிக சாதாரணமான விஷயம் உலகம் முழுவதும் பரவ முடியும் .அந்த வலைதளங்கள் செயல்படும் விதம் அப்படி.

வரலாற்றில் இப்படி திடீரென்று பிரபலம் ஆனவைகள் நாளடைவில் காணாமல் போன கதைகள் ஏராளம் . அண்ணா ஹாசரேயும் , கொலவெறியும் அந்த  லிஸ்டில் கண்டிப்பாக சேரும்.









ஸ்ஸூகூல்...!

கடந்த ஒரு மாதமாக டப்பாவ தொடவே முடியாம போய்ருச்சு . அதனால நொம்ப லேட்டா சொல்லுறேன் " அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" . அது என்னனா , தங்கமணிக்கு லீவ் (ஒரு வருஷம்) முடிஞ்சு போச்சு. ஜனவரி ரெண்டாம் தேதியில் இருந்து ஆபீஸ் போறாங்க. ஒரு மாசமா தமிழ் நாட்டுல லீவ என்சாய் பண்ணுணதுல கட பக்கம் வர முடியல . அதனால ப்ளாகர் உலகம்  ஒண்ணும் குடி முழுகி போகாதுன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் ஒரு பில்ட் அப் வேணாமா ?
ஹரீஷ்
ஹரீஷ் 
டிசம்பர் மாசம் முழுசா சசிகலா , தானே புயல் , கொல வெறி,முல்லை பெரியாறு ..! இது தான் ஹாட் ஆப் த டாபிக் . ஒரு சில பத்திரிகைகள் தான் இதை தவிர்த்து மற்ற விசயங்களையும் போட்டாங்க.
சிங்கத்தோட( எ(ங்களோட)ன்னோட)  குட்டிய( பையன்) கொண்டு போய் ஸ்ஸூகூல்ல போட்டாச்சு . மொத நாள் நான் கூட இருந்தகாட்டி அழுகாம இருந்துட்டான் . ரெண்டாம் நாள் கத்தி ஆற்பாட்டம் பண்ணி ஒரே ரகளை ஆகி போச்சு . வேற வழி இல்லாம விட்டுட்டு வரும் போது ஜன்னல் கம்பியை பிடிச்சுட்டு ரோட்டுல போற யாரையோ பாத்துட்டு 'அப்பா வாப்பா ..வாப்பானு' கூப்பிடும் போது இந்த சிங்கதுக்கே கண்ணுல தண்ணி வந்துருச்சு . தங்கமணி நைஸ்ஸா 'நீங்களே கொண்டு போய் விட்டுடுங்கனு' எஸ்கேப். மூணாவது நாள் சேரை கிரில் கதவுக்கு பக்கத்தில் போட்டு உக்காந்துட்டு அழுகை. ஒரு வாரம் ஆச்சு அழுகையை நிறுத்த. இப்ப கூட அப்பப்போ அழுகிறானாம்.  
அந்த ஸ்ஸூகூல்ல ஒன்றரை வயசு முதல் குழந்தைகள் உள்ளார்கள்.  இவன் ஏன் இப்படி கத்தி ஆற்பாட்டம் பண்ணுறான் என்று அவர்களுக்கு எல்லாம் ஆச்சரியம் . ஒரு பெண் குழந்தை 'அங்கிள் ,எனக்கு நெத்தி சுட்டியே இல்லை ..! அம்மாவ வாங்கி தர சொல்லுங்க ' என்றது. இன்னொரு குழந்தை இவன் முன்னாள் நாட்டியம் ஆடி சிரிக்க வைக்க முயன்றது . மற்றொன்று ஒரு பந்தை கொண்டு வந்து தந்தது . ஒரு வினாடி அழுகையை நிப்பாட்டி, பந்தை கையில் வாங்கி வைத்து கொண்டு மீண்டும் அழுக ஆரம்பித்தான், மற்றொரு குழந்தை விளையாடி கொண்டு இருந்த கார் பொம்மையும் வேண்டும்மென்று . அந்த குழந்தைகளும் ஆரம்பதில் இவனை போல் தான்  அழுதார்களாம்.
ஒரு வார காலம் அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தோம் . தினமும் காலையில் ஸ்ஸூகூல் போகிறேன் என்று அவன் அனுபவிக்கும் துன்பத்தை இப்படி ஈடு செய்வோம் என்று ஒரு விதமான மன ஆறுதல். இருந்தாலும் கையுக்கும் காலுக்கும் நடுவே ஓடி ஆடி கொண்டு கூடவே இருந்த குழந்தை திடீரென்று ஆறு மணி நேரம் பிரிந்து போனது ஒரு விதமான வேதனை தான்.
புனேக்கு திரும்பி வரும்போது கேட்டேன் " ஹரீஷ் உன் ஃப்ரெண்ட்டோடா பேர் என்ன ?" "ப்ரீஷ்" என்றான் ( ப்ரீனித்தா ..!). வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.
Blogger Widgets