சமசீர் கல்வித்திட்டத்தை பரிசீலனை செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையீன் பேரில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து உள்ளது. நல்லது நடந்தால் சரி. நிபுணர்கள் எந்தவிதமான பார பட்சமும் இன்றி ஒரு நல்ல பாட திட்டத்தை தந்தால் நல்லது.அவர்களுக்கு என்னுடைய சிறிய வேண்டுகோள் கீழே உள்ளது:
(UPDATE: ஒரு வழியாய் சமச் சீர் ,கொண்டு வந்துட்டாங்கையா ...மக்கா ...! )
தமிழ் - நன்கு எழுத்து பிழை இல்லாமல் ,எழுதமுடிகிற மாதிரி புத்தகமும் பாடமும் இருக்க வேண்டும். 'அறுசீர் கடி நெடிலடி கலந்து ஆசிரியப்பாவில் தொடங்கி குரள்பா வழியாக கலிப்பாவில் 'பாட்டு அல்லது கவிதையோ ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் இல்ல பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தேவை இல்லை என்பது என்டுடைய சொந்த கருத்து." தமில் வாள்க..! வழர்க" என்ற நிலைக்கு போகாமல் காப்பாத்தனும். பைத்தியம் - பயித்தியம் வித்தியாசம் தெரியற மாதிரி இருக்கட்டும் புதிய சமச்சீர் கல்வி.கதை ,கட்டுரை எழுத மாணவர்களை ஊக்கு விக்கலாம் .
ஆங்கிலம் - மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே ஆங்கிலம் என்று இல்லாமல்,அடிப்படை இலக்கணம் எங்கனம் எப்படி உபயோக படுகிறது என்பதை திறம் பட சொல்லி தர வேண்டும் . இங்கேயும் கட்டுரை எழுதுவதை ஊக்கு விக்கலாம்.
அறிவியல் - அன்றாட வாழ்வில் எப்படி எல்லாம் அறிவியல் பயன்படுகிறது என்பதை நல்ல உதாரனதுடன் எடுத்து சொல்ல வேண்டும். வெறும் 'மியசிஸ் ' 'மைடசிஸ் ' என்று ஜல்லி அடிக்காமல் இன்டர்நெட்டில் இருந்து நல்ல நல்ல படங்களாக காட்டி அதை புரிய வைக்க வேண்டும். மைடோகாண்டிரியாவை ஒரு ரிப்பன் மாதிரி தான் கற்பனை செய்து வைத்து இருந்தேன். அதே மாதிரி பிரயோபைட்டா, டேரிட்டோபைட்டா ஒரு இருதய வடிவ இலை மாதிரி யூகம் செய்து வைத்து இருந்தேன்.ஆனால் உண்மையில் அதன் வடிவம் வேறு.பால்மர் வரிசை , நியுட்டன் வளையம், இதை எல்லாம் பார்க்காமலே படித்து வந்தேன்.அப்படி இல்லாமல் நிறைய ஆய்வக செயல்கள் இருக்கும்மாறு வேண்டுகிறேன்.
கணிதம்- ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் அதன் மூன்றாவது பக்கத்தின்...போன்ற பிதாகரஸ் தேற்றங்கள் நடை முறை வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது என்பதை விளக்க வேண்டும்.பாய்சன் பரவல் ,அந்த தேற்றம் ,இந்த தேற்றம் எல்லாம் எப்படி உபயோக படிகிறது என்பதை ஒரு இரண்டு வரிகளில் எடுத்துச் சொன்னா நொம்ப புண்ணியமா போகும். வகை கெழு, தொகை கெழு , எல்லாம் எங்கு எப்படி நமக்கு பயன் படுகிறது என்பது தெரியாமலே படித்தேன் நான்.
![]() |
என் பரிச்சை பேப்பர் |
உத்திர பிரதேசம் எங்கு உள்ளது என்பது தெரியாமலேயே நான் அங்கு கரும்பு விளைச்சலைப் பற்றி படித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக ஒரு இந்திய வரைபடமும் , உலக வரைபடமும் இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட ஆசிரியர்கள் தங்களுடைய அறிவை இந்த காலத்திற்கு ஏற்ப அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.அணுக்கரு உலையை பற்றி பாடம் எடுக்கும் போது கூடங்குளம், ஜப்பானின் கதிரியக்கம் ஆகியவற்றையும் சொல்ல வேண்டும்.
லீவில் உள்ள போது +2 க்கு ரிசல்ட் வந்து இருந்தது . நிறைய பேர் சதம் அடித்து இருந்தார்கள். வழக்கம் போல பெண்கள் பையன்களை விட அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தார்கள். எப்படி இதனை பேர் சதம் அடித்தார்கள் என்று தெரிய வில்லை. ஒன்று பாடத் திட்டம் ரொம்ப எளிமையாக இருந்திருக்க வேண்டும் இல்லை எனில் பேப்பரை எளிதாக திருத்தி இருக்க வேண்டும்.இயற்பியல் , வேதியல் , உயிரியல் போன்ற பாடத்திலும் சதம் போட்டு இருந்தார்கள். நான் படித்த காலத்தில் கணிதத்தில் சதம் எடுத்தால் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.இண்டர்நெட், டிவி ,மீடியா என்று டெக்னாலஜி வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் பாடங்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை.வாத்தியார் நல்லா புரியும் படி சொல்லி தர வில்லை என்றால் , இன்டர்நெட்டில் வேண்டிய அளவிற்கு அதை பற்றிய தகல்கள் அவனுக்கு கிடைத்து விடும்.( கிராம புற மாணவர்களை தவிர )