Pages

Wednesday, January 19, 2011

காதுல பூ...!

ஆனாலும் இந்த ராஜ் டிவி காரங்க மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்காங்க. நேத்து ராத்திரி " தெரியும்மா சினிமா "னு ஒரு நிகழ்ச்சி. அதுல மாதவனோட போடோவையும் ,கமல்ஹாசனோட போடோவையும் ஒரு விதமா இணைச்சு , இதுல இருக்கிற நடிகர்கள் யாருன்னு போன் பன்னி சொன்னா, நமக்கு 40 ,000 /= தருவாங்களாம். ஒரு நிமிசத்திற்கு 10 /= மட்டும் தான் செலவு ஆகும். நாலாவது படிக்கும் என் அக்கா வீட்டு பையன் கூட அத பார்த்துட்டு " மாமா ,இது மாதவனும் ,கமல் அங்கிளும் "னு சரியாய் சொல்லிட்டான்.
மேட்டர் அது இல்ல , சில பேர் போன் பன்னி "அஜீத்தும் , சரத்குமாரும் "னு சொல்லுறாங்க, இல்லைனா " விஜயும்  சத்தியராஜு"ம்னு சொல்லுறாங்க . இதுக்கு ரெண்டு நிகழ்ச்சி  தொகுப்பாளர்கள் வேற. நல்லா காதுல சுத்துறாங்க . கேக்கிறவன் கேனயன்னா, எலி ஏரோ பிளேன் ஓட்டுமாம்....!  அப்புறம் லீகல் அறிவிப்பு வேற  நாம கால் பண்ணும் போது ஹோல்டுல போக சான்ஸ் இருக்காம் , அப்படி இருந்தா  கட் பண்ணிட்டு மறுக்கா கூப்பிட்டா போதுமாம் . எந்த மடையன் கால் பண்ணுவாங்கனு நினச்சுட்டு இவங்க இப்படி எல்லாம் நிகழ்ச்சிய காட்டுறாங்க. சும்மா போங்குக்கு, அவங்க ஆளே போன் பன்னி ,தப்பு தப்பா சொல்லி," சே , என்ன இது கூட தெரியாதா, நான் சொல்லுறேன் பாரு " அப்பிட்டின்னு  நம்மள டெம்ப்ட் பன்னி போன் பண்ண வைக்க பாக்குறாங்க. நெஜமாலுமே டிவி பாக்கிறவங்க  ரொம்ப முட்டாள்கள்னு நினைச்சா மட்டுமே இப்படி எல்லாம் நிகழ்ச்சி காட்ட முடியும். ராஜ் டிவிக்கு  ஒரு பெரிய கும்பிடு.....!( தப்பு என் மேல தான் அதையும் உக்காந்து பார்த்தேன் பாரு...அது அந்த நிகழ்ச்சியோட வெற்றி )

Friday, January 14, 2011

முரண்பாடுகள்

தங்கமணியிடம் நான் படித்த புத்தகத்தை பற்றி கொஞ்சம் விவரித்தேன். ஆனால் தங்கமணியோ எந்த வித ஆர்வமும் இல்லாமல் தலையை மட்டும் ஆட்டியது. அவரை சொல்லி குற்றம் இல்லை. அவர் ஆனந்த விகடன் ,குமுதம் போன்ற பத்திரிக்கைகலையே மேலோட்டமாக மட்டும் பார்ப்பார். இதுல நான் எஸ் .ராமகிருஷ்ணன் சிறு கதையை பற்றி விவரித்தால் அவருக்கு என்ன புரியும்.என்னுடைய ரசனையும் அவருடையதும் வேறு வேறு. எனவே முரண்பாடுகள் ஏற்படுகிறது.

பொதுவாக , மெல்ல திரும்பி பார்க்கும் போது என்னுடைய வாசிப்பின் படி நிலைகள் என் வயதுக்கு ஏற்ப மாறி கொண்டே வருகின்றது. ஆரம்ப காலத்தில் என்னக்கு கதை படிப்பது என்பது பாட புத்தகங்களில் இருந்து தான் ஆரம்பம் ஆகியது. துணை பாட நூலை நான் புத்தகம் வாங்கிய உடன் படித்து பார்ப்பேன். அதில் தான் கதைகளும் கட்டுரைகளும் இருக்கும். அடுத்து படிக்கும் புத்தகம் வரலாறு . யார் ,எந்த மன்னர் எந்த நாட்டில் படை எடுத்து எப்படி ஆட்சி செய்தார் என்று ஆராய்வேன்.பாட புத்தகங்களில் என்னை துணை பாட நூலை தவிர்த்து ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்தியது அறிவியல். அதில் கூறப்பட்டு இருக்கும் "செய்து பார் " செயலை என்னால் முடிந்த அளவு செய்து, அப்படி தான் நடக்கிறதா என்று உறுதி படுத்தி கொள்ளவேன். என் கேள்விக்கு அறிவியல் வாத்தியார் பதில் சொல்ல முடியாமல் " மூடிட்டு உக்காருடா, வந்துட்டான் ....மனசுல பெரிய நியூட்டன்னு நினைப்பு..." கத்துவார்.பொட்டலம் கட்டியுள்ள நியூஸ் பேப்பரில் கூட என்ன உள்ளது என்று படிப்பேன்.

அப்பா முதன் முறையாக காமிக்ஸ் (படக்கதையை) வாங்கி கொடுத்தார். நான் அன்று அடைந்த பரவசம் இன்னும் நினைவில் உள்ளது. அதற்க்கு முன்பு வரை "அம்புலிமாமா, கோகுலம் "என்ற புத்தகங்களை படித்து கொண்டுருந்தேன் . அதில் அவ்வளாவாக படக்கதை இருக்காது. " ராணி காமிக்ஸ் " படக்கதையை அடுத்த முறை பதிப்பு வரும் வரை படிப்பேன். அம்மா ராணி நாவல் வாங்கும் போது இதையும் வாங்கி வருவார்கள். நாவலில் கடைசி பக்கத்தில் இருக்கும் அறிவு திறன் போட்டியில் கலந்து கொண்டு அனுப்பி வைப்பேன். ஆனால் ஒரு முறை கூட எனக்கு பரிசு கிடைத்தது இல்லை. கேள்வி என்னவோ ரொம்ப எளிமையாக தான் இருக்கும். "இங்கு தண்ணீர் இருக்கும் ..............குளம்/ ஆறு " இந்த ரேஞ்சில் இருக்கும் . ஆனாலும் ஏதாவது தப்பு பன்னி இருப்பேன்.

ராணி காமிக்ஸ்க்கு அப்புறம் ,முத்து ,லயன் காமிக்ஸ் பக்கம் என் பார்வை திரும்பியது. லயன் ,முத்து காமிக்ஸ்க்கு பிறகு ராணி காமிக்ஸின் கதைகள் சற்று தரம் குறைந்ததாக பட்டது. இன்று வரை சந்தா கட்டி படித்து வருகிறேன். காமிக்ஸ் படிக்க தூண்டியவர் என் அப்பா. அதற்க்கு பிறகு இவனுக்கு எதுக்குடா இந்த பழக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டோம் என்ன நொந்து நூலாகும் அளவிற்கு என் காமிக்ஸ் பைத்தியம் இருந்தது. நான் என் தங்கைக்கு பழக்கி விட்டேன். இரும்பு கை மாயாவி, டேவிட் லாரான்ஸ், 007 , டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் ...இப்படி என் கதை ஹீரோக்கள் ரொம்ப பேர். லயன் ,முத்து காமிக்ஸ் தமிழாக்கம் ரொம்ப பிரமாதம்மாக இருக்கும்.

பின்னர் ,கூடவே வயது ஏற ஏற குங்குமம் , முத்தாரம், கல்கண்டு , ஆனந்த விகடன் ,குமுதம் ,பாக்கியா, இப்படி மாறியது. வெறும் ஜோக்குகளை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவன் மெதுவாக சிறு கதைகளை படிக்க ஆரம்பித்தேன். பின்னர் தொடர் கதைகளுக்கு மாறினேன். ராமகிருஷ்ண விஜயம், ஞாண பூமி போன்ற ஆன்மிக இதழ்களையும் விட்டு வைக்க வில்லை.அதில் வரும் கதைகளையும் படித்தேன். ஒரு இலக்கு இல்லாமல் படித்து கொண்டு இருந்தேன். பின்னர் ராஜேஷ் குமார் , சுபா, போன்றோர்களின் துப்பறியும் நாவலை படித்தேன். இந்த கால கட்டத்தில் கொஞ்சம் அரசியல் பத்திரிக்கைகளையும் படித்தேன் . நண்பர்களின் உதவியால் "மஞ்சள் பத்திரிக்கை "யும் படித்தேன் . பருவ காலம் என்ற புத்தகம் எங்களிடையே ரொம்ப பிரசித்தம். ஒரு கால கட்டத்தில் ஜூனியர் விகடன் ,ரிபோர்டர் ,நக்கீரன் ,இப்படி எல்லா இதழ்களையும் பிரதி தவறாமல் வாங்குவேன்.

கல்லூரி படிக்கும் போது கட்டாயமாக ஒரு ஆங்கில கதையை படித்து அதை சுருக்கமாக ஒரு நோட்டில் எழுதி தர வேண்டும் . அப்போது தான் இன்டெர்னல் மார்க் கிடைக்கும். நான் ஆரம்பத்தில் இருந்து ஊ.ஓ.து .பள்ளியில் படித்து ( ஊராச்சி ஒன்றிய துவக்க பள்ளி ),உ.ஓ.ஆ.மே.நி.பள்ளியில் ( ஊராச்சி ஒன்றிய ஆண்கள் மேல் நிலை பள்ளி ) படித்து பின்னர் உ.ஓ.உ.நி.பள்ளியில் பெண்களுடன் சேர்ந்து படிக்கும் பாக்கியத்தை பெற்றவன். abcd மட்டும் தெரிந்த என்னைய போய் ஆங்கில கதை படிக்க சொன்னால் என்ன பண்ணுறது.

இருப்பதிலேயே சின்னதாக உள்ள புத்தகங்களை தேடி எடுத்து அங்க கொஞ்சம் ,இங்க கொஞ்சம் வெட்டி அப்படியே எழுதி ஒப்பேதுவார்கள். நான் சின்சீயர் சிகாமணி . டிச்னரி வைத்து கொண்டு அர்த்தம் புரிந்து ,கதையை புரிந்து ,பின்னர் அதை ஒரு தனி தாளில், தமிழில் எழுதி அதை அப்படியே ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக இலக்கண பிழையுடன் எழுதி வைப்பேன். ஆனாலும் நல்ல மார்க் போடுவார்கள். எப்படிடா இவன் மட்டும் 10 க்கு 8 வாங்குறான் என்று நண்பர்கள் காதில் புகை வரும்.

ஒரு நாள் ஆங்கில லெக்சர் என்னை கூப்பிட்டு என் கதை சுருக்கங்களை பாராட்டி ,"நல்லா இருக்கு ,ஆனா கிராம்மர் மிஸ்டேக் இல்லாமல் பார்த்துக்கோனு" சொல்லி சில எளிய ஆங்கில கதை புத்தகங்களின் பெயரை சொல்லி அவர் அக்கௌண்டில் புத்தகங்களை எடுத்து படிக்க வகை செய்தார் .அப்போது இருந்து ஆங்கில கதை படிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது . ஆனாலும் பெரிய பெரிய ஆங்கில நாவல்களை படிக்கும் திறமை கை வர வில்லை . காரணம் இரண்டு . 1. வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் டிச்னரியை அடிக்கடி புரட்டி பார்ப்பதில் இருந்த சலிப்பு .2. மேல் நாட்டு கலாச்சார டையலாக்குகள் புரியாததால் வந்த எரிச்சல். பின்னர் விமான படையில் வாயு மனிதனாக சேர்ந்த பிறகு வாக் இங்கிலீஷ் ,டாக் இங்கிலீஷ் ,ஸ்லீப் இங்கிலீஷ், என ஒரே இங்கிலிபீசு மயமாகி போச்சு. நண்பன் பாபு படிப்பதை போல நாமும் இங்கிலீஷ் நாவல் படிக்கணும்னு திக்கி திணறி படித்த நாவல் Frederick Forsyth, எழுதிய " The day of the Jackel " ஓர் அளவிற்கு கதை புரிந்தது. பின்னர் இதை Bruce Willis நடித்த படமாக பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது . ஒரே holliwood படமாக பார்த்ததில் நிறைய டையலாக்குகள் புரிய வந்தது.


பின்னர் Ken Follett , Robin Cook , Dan Brown , Agatha Christie , இப்படி படித்தேன் . பின்னர் முத்து செல்வம் என்ற நண்பர் மூலமாக கணையாழி , இலக்கிய இதழ் படிக்க நேர்ந்தது. முதலில் ஒன்னும் புரிய வில்லை. ஆனால் எதோ ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது.இந்த கால கட்டத்தில் சுஜாதா விகடன் மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார் . அவருடைய நடை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தேடி தேடி அவருடைய எல்லா புத்தகங்களையும் வாங்க ஆரம்பித்தேன். அவர் ஒரு தீர்க்க தரிசி. ( ex - கருப்பு குதிரை - கிரிக்கெட் மேட்ச் பிக்ஸ்சிங் ஊழல் ).அவரை பற்றி நான் சொல்ல தகுதி அற்றவன். எல்லோருக்கும் அவரை பற்றித் தெரியும். அவர் சிபாரிசு செய்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். மெதுவாக எழுத்தாளர்களின் நடை புரிய ஆரம்பித்தது. எழுத்தாளர்களும் புரிய ஆரம்பித்தது . தற்போது ஜெயமோகன் ,ராமகிருஷ்ணன் , இப்படி தற்கால இலக்கிய எழுத்தாளர்களை படிக்க ஆரம்பித்து இருக்கேன். ராமசாமி , ஜெயகாந்தன் ,நாவல்களையும் படித்து கொண்டு உள்ளேன். குமுதம் ,ஆனந்த விகடன் எல்லாம் என் வாசிப்பில் இருந்து எப்பவோ வெளியேறி விட்டது. ஜன ரஞ்சக பத்திரிக்கையை விட்டு இப்போ தனி தனி எழுத்தாளர்களின் கதைகள் ,நாவல்கள் என என் தேடல்கள் ஆரம்பித்து உள்ளது.எழுத்து ,கதை என்பது வெறும் பொழுது போக்கு மட்டும் அல்ல அது நமது காலத்தின் பிரதிபலிப்பு, நமது இப்போதைய கலாசாரத்தின் வெளிப்பாடு என புரிய வந்தது. சில பல இடது சாரி பத்திரிக்கைகளின் மூலமாக நாட்டின் பிரச்சனைகளையும்,அதன் காரனங்களையும் அறிய முடிந்தது. இந்த விசயத்தில் எந்த டிவி நியூஸ் சேனலையும் நான் நம்ப வில்லை.


இப்படி ஒரு இலக்கு இல்லாமல் , ஒரு தேர்வு இல்லாமல் ,எல்லாத்தையும் படிப்பதால் ,பல விசயங்களை அதன் மேலோட்டமான விசயத்தையும் தாண்டி , அதன் உள் அர்த்தங்களை என்னால் பகுக்க முடிகிறது. அது சரியா, தவறா என்று ஆராய முடிகிறது . இதனால் ,பலருடன் பல விசயங்களில் என் கருது முரண்படுகிறது. சில சமயங்கில் ஏன் தான் இவர்கள் இப்படி அப்பாவியாய் இருகிறார்களோ என்று பாவமாக தோன்றும். ஒரு வேலை நாம் தான் தப்பாக அர்த்தம் கொண்டு இருக்கோமோ என்று சந்தேகம் கூட வரும். அதற்காக நான் எல்லாம் தெரிந்தவன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்பதில் நான் தெளிவாக இருக்கேன்.

இப்போதைய இளைஞர்கள் , பெண்கள் வாசிப்பில் அதனை கவனம் செலுத்துவது இல்லை. ரொம்ப அவசரமாக எல்லாத்தையும் எதிர் பார்கிறார்கள். குமுதம் ,ஆனந்த விகடன் கூட சிறு கதைகளை விட்டு வெளியே வந்து விட்டது. ஒரே ஒரு பக்கத்திற்குள் கதையை முடித்து விடுகிறார்கள். கல்லூரி மாணவர்கள் ஒரு sms க்குள் கதை சொல்லுகிறார்கள். ஒரே வேகம்... வேகம் ..வேகம்.. யாருக்கும் பொறுமை இல்லை. நான் ஒரு கல்லூரி பெண்ணிற்கு , சேட்டன் பகத் , Ken Follett , Robin Cook , Dan Brown நாவல்கலயும்,RK நாராயணன் மால்குடி டேஸ், அருந்ததி ராயின் " God of Small Things "," A Beautiful Mind " autobiography யும் கொடுத்தேன் . சேட்டன் பகத் மட்டும் பிடித்து இருந்தது. மற்ற நாவல்களின் கதை சுருக்கம் வேண்டுமாம். அப்போது தான் படிப்பாளாம். வழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஜன ரஞ்சக நாவலின் வழியே இலக்கிய நாவலை புகுத்தி ஒரு நல்ல வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற என் முயற்சி பலனளிக்கவில்லை . காரணம் "Conflicts of interests " . ரசனை முரண்பாடுகள்.

Wednesday, January 12, 2011

புதிய பக்கங்கள்

நான் ரசித்த படங்கள், ரசித்த கவிதை, என் SMS ஜோக்ஸ் என புதிய பக்கங்களை போடலாம் என இருக்கேன்.யாருக்காவது எதாவது ஆட்சேபனை இருக்கா....?  ( என்னமோ நம்மள ஒரு ஆயிரம் பேர் FOLLOW பண்ணுற மாதிரி .... சும்மா ஒரு build up தான் )

Monday, January 10, 2011

New Year

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடதில்லாவது பெட்ரோல் விலை உயராமலும் , வெங்காய விலை இமயமலை அளவு வளராமலும் , எந்த சூறாவளியோ, புயலோ வராமல், அளவோடு மழை பெய்து ,இதமான வெயில் அடித்து , பஸ், ரயில் கட்டணம் உயராமல் ,முக்கியமாக எந்த ஆயிரம் கோடிகளில் ஊழல் நடக்காமல், ஒரு நல்ல ஆண்டாக இருக்க அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

ரொம்ப லேட்டாக புத்தாண்டு வாழ்த்து  சொன்னதிற்கு மன்னிக்கவும்.மடி கணினியோ அல்லது USB broadband மோடம் இருந்திருந்தால் உடனே சொல்லி இருக்க முடியும். இன்டர்நெட் சென்டரில் உக்காந்து கொண்டு டைப் பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்மாக தான் உள்ளது. வீட்டில் டெஸ்க்டாப் உள்ளது. ஆனால் இன்டர்நெட் வசதி இல்லை. மாதம் குறைந்தது 700 ருபாய் தேவை படும். நான் எனது அலை பேசிலேயே இணையத்தை அணுகி கொள்வேன் .என்ன, வேகம் தான் குறைவு.
ஒரு வழியாக நமது நாட்டின் முதல் குடிமகள் இங்கு (புனே ) வந்து விட்டு போய் விட்டார்கள். DD நியூஸ்ல் நேரடி ஓளிபரப்பு இருக்கும் என பார்த்து ஏமாந்து போயிட்டேன். பேருக்கு ஒரு 10 வினாடிகள் மட்டும் காட்டினார்கள் . மிக அருமையான parade , மற்றும் சுகாய்-30 ன் ஏரோபடிக்ஸ் நன்றாக இருந்தது. ரைபிள்ளை வைத்து விமான படை வீரர்கள் செய்த வித்தையை காட்ட வில்லை. ( " A Few Good Man " ஆங்கில படத்தில் பெயர் போடுவதற்கு முன்பு வரும் சாகசத்தை போன்றது .) ஆனால் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் எடுத்த விசயத்தை மிக விலாவாரியாக காட்டினார்கள். வாழ்க கிரிக்கெட்  .

அப்புறம் இந்தமுறை நீண்ட விடுமுறையில் இருந்தேன்.(35 நாட்கள் ). பெரும்பாலும் இரவு நேரத்தை டிவி பார்ப்பதில் செலவு செய்தேன். வாழ்கையே நொந்து போகும் அளவிற்கு இருந்தது பெரும்பான்மையான நிகழ்ச்சிகள். ஒரு தொலைகாட்சில் என்னடான கலைஞ்சற்கு ஒரே பாராட்டு விழாவா இருக்கு. இன்னொன்றில் ஒருவர் தலைகிழாக தொங்கியபடி வெல்டிங் பண்ணுகிறார். நம்ப முடியாத அசாத்திய திறமையை அவர் வெளிபடுதுகிறாராம். இல்லைனா சொந்த வீட்டு பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டி கண்ணில் கண்ணீர் விட்டு கொண்டு திரிகிறார்கள். இதெல்லாம் பத்தாதுன்னு ஆளாளுக்கு மக்கள் அரங்கம் , மக்கள் மன்றம் அது இதுன்னு ஒரே டாக் ஷோ .சரி அதில் பேசுறவங்கலாவது நல்லா பேசுறாங்களானு பார்த்த அதுவும் இல்ல . சும்மா தொண்டை கிழிய கத்துறாங்க. நமக்கு கத்து ஜவ்வு கிழிந்தது தான் மிச்சம். எல்லாம் ரொம்ப செயற்கையாக பேசுகிறார்கள் .

அப்புறம் பார்த்தா பாட்டுக்கு டான்ஸ் ஆடுறது, அதுக்கு ஒரு ஜட்ஜுனு ஒரு ஆள் உக்காந்துட்டு " உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சரி இல்லை " ," நாலாவது பீட்டுல நீங்க ஸ்டெப்ப விட்டுடிங்க " இப்படி ஒரே  அலப்பறை. அப்புறம் வருவது பாட்டு ஷோ , இதுக்கும் ஒரு ஜட்ஜ் உண்டு. அவர் " நீங்க பல்லவில நல்லா பாடுனீங்க ஆனா சுருதில விட்டுடிங்க" " உங்க டெம்ப்போ சரி இல்லனு " ஜல்லி அடிக்க வேண்டியது.(  இத சொல்லுற ஜட்ஜ்க்கு ,பல்லவி ,சுருதி அப்பிடினா பக்கத்துக்கு வீட்டு பிகர் தான் தெரியும் , பாக்கிறவனுக்கு என்ன புரிய போகுதுன்னு ஒரு குருட்டு தைரியமா இருக்குமோ...! )

இல்லைனா கேம் ஷோ . சரி மியூசிக் சேனலில்லாவது நல்லா பாட்டு போடுறாங்கன அதுவும் இல்லை. சிரிப்பு சேனலிலும் பார்த்த ஜோக்குகளே மறுக்கா மறுக்கா ( மறுக்கா - மறுபடியும் ) போட்டு கழுத்த  அறுகிறார்கள். இவை எல்லாமே வெளிநாட்டு சேனல்களின் காப்பி. AXN சேனலில் ஒரு கேம் ஷோ பார்த்தேன். 60 வினாடிகளில் ஒரு விசயத்தை செய்ய வேண்டும் .உதரணமாக மூன்று பலூன்களை 60 வினாடிகளுக்கு தரையில் படாமல் காற்றிலேயே மிதக்க விட வேண்டும். நல்லா விறு விருப்பாக போகிறது. குறித்து வைத்து கொள்ளுங்கள் இதையும் தமிழ் சேனலில் இன்னும் கொஞ்ச நாட்களில் பார்க்கலாம்.

இதில் ஆறுதலான விஷயம் எண்ணான ,இந்த பெரிய பெரிய சேட்டிலைட் சேனல்களுக்கு இணையாக லோக்கல் சேனல்கள்களும் களத்தில் இருந்து மிக அருமையான நிகழ்சிகளை வழங்குகிறார்கள். லோக்கல் விளம்பரத்தால் அக்கம் பக்கம் நடக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது. உள்ளூர் செய்திகளும் உண்டு. என்ன , இந்த சோதிடம் , சாமியார் அருள் வாக்கு போன்ற வெரி லோக்கல் மேட்டர்களில் தான் கொஞ்சம் கடுப்பு வருகிறது. மிக அருமையாக பாடல்களை தொகுத்து வழங்குகிறார்கள். தொகுப்பாளினியாக வரும் பெண்கள் எல்லோரும் ,பெரிய சேனல்களில் வரும் பெண்களை காட்டிலும் அழகாக இருகிறார்கள். ரியல் எஸ்டேட் பிசினஸ்ஸை லாவகமாக நம் வீட்டில் புகுத்துகிறார்கள். எங்க அந்த சைடில் நிலம் வாங்கலினா அவ்ளோ தான் நம்ம வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லைங்கிற ரேஞ்சுக்கு பீல் பண்ண வைக்கிறாங்க.  டாக்டர் ,வக்கீல் இப்படி லோக்கல் பெரிய ஆட்களை  கூட்டி கொண்டு வந்து நம்முடைய  சந்தேகங்களை தீர்த்து வைக்க ஒரு கருவியாக உள்ளார்கள்.
ஒரு சில நிகழ்சிகளை தவிர மத்தது எல்லாமே அடாசு தான் . மக்கள் டிவியில் சனி கிழமையும்,சண்டேயீளும் "ஏன்,எதற்கு ,எப்படி " நிகழ்ச்சி நன்றாக உள்ளது. எந்தனை பேர் பார்கிறார்கள் என்று தான் தெரிய வில்லை. அறிவியலை எளிதான சோதனை மூலம் அழகாக விளக்குகிறார்கள் . நல்ல முயற்சி. விஜய் டிவி யில்  நீயா நானா கொஞ்சம் பரவா இல்லை. DD  பொதிகையில் விவசாய நிகழ்ச்சிகள் நன்றாக உள்ளது. கிஸான் கால் சென்டர் நம்பர் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரிய வில்லை. இலவச சேவை தான். சோதித்து பார்க்கலாம் என்று கூப்பிட்டு ,எங்கள் வீட்டு கொய்யா மரத்தில் வெள்ளை வெள்ளையாக பூச்சி வந்து உள்ளது ,எப்படி கட்டு படுத்த வேண்டும் என்று கேட்டேன். நன்கு விலாவரியாக என் சந்தேகங்களை கேட்டு எப்படி, எந்த பூச்சி கொல்லி ,எந்த விதத்தில் அடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். மிக மிக அருமையான சேவை. விவசயீகள்  இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிஸான் கால் சென்டர் நம்பர் எல்லா நாளிதழகளிலும் விளம்பரமாக வர வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக நானும் எவ்ளோவோ பத்திரிக்கைகளை பார்த்துட்டேன் , சென்ற ஆண்டின் டாப் 10, டாப் 10 சொதப்பல்கள் போன்ற ஒன்னும் வரவில்லை . விகடன் எதோ கொஞ்சம் போட்டு இருந்தார்கள். ஆனாலும் எழுத்தாளர் சுஜாதா மாதிரி செலக்ட் செய்து போடா ஒருவராலும் முடியாது. I miss Writter Sujatha So much....! பாக்க வரைக்கும் பாத்துட்டு நானே டாப் 10 ,டாப் 10 சொதப்பல்கள் போட்டுருவேன். மத்த வலை பதிப்பாளர்கள் என்ன பண்ணுறாங்கனு கொஞ்ச நாள் பார்த்துட்டு நான் என்னோட டாப் 10  போடுறேன். ஓகே.

முதல் குடி மகள் வந்துட்டு போனா விசயத்த பத்தி அடுத்த பதிப்பில் போடுறேன். ஓகேயா...!
Blogger Widgets